Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை by Thanabalasingham Krishnamohan

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan

  • State Institution- A View of Executive Branch

    State Institution- A View of Executive Branch

    Tuesday, 15 October 2013 23:34
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    Tuesday, 15 October 2013 23:07
  • இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    இருபத்தியோராம் நூற்றாண்டில் எழுச்சியடையும் சீனாவின் கடல் வலிமை

    Tuesday, 15 October 2013 23:32
  • இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    Tuesday, 15 October 2013 23:36
  • நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    Tuesday, 15 October 2013 23:39
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...

Around the World

  • Israel is accused of spraying chemicals on farmland inside Syria and Lebanon to destroy crops and plants.

    Read more...
  • Senior colleague tried to topple British PM, and top aides resign as Epstein files have ripple effects far beyond US.

    Read more...
  • Al Jazeera explains how one player's removal from a franchise led to the biggest cricket crisis in recent years.

    Read more...
  • Security forces deployed after gunfire heard near central prison.

    Read more...
  • Transparency International says the average global score in its report is at its lowest level in more than a decade.

    Read more...
  • US-made thermal weapons burning at 3,500C caused 2,842 people to "evaporate" in Gaza, Al Jazeera investigation finds.

    Read more...
  • Follow our live build-up, with toss and teams, ahead of our full text commentary stream of the group stage game.

    Read more...
  • Displaced civilians in South Sudan have fled heavy fighting between government forces and opposition fighters.

    Read more...
  • Humanitarian operations have been impeded by attacks, looting and restrictions on movement.

    Read more...
  • Visiting US Vice President JD Vance pledges as much as $9bn in potential investment in Armenia.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.12 , 2013.01.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தினை அடைந்த தருணத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்தி யுத்தநிறுத்த உடன்பாட்டினை ஏற்படுத்த மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடனும், தந்திரத்துடனும் தடுத்துள்ளமை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் மூலம் வெளிவந்துள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பரபரப்பான இறுதி வாரங்களிலும், நாட்களிலிலும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதிலும், தவிர்ப்பதிலும் கவனம் செலுத்தி யுத்ததில் இறுதி வெற்றியினை அடைவதில் இந்தியா குறியாக இருந்துள்ளது. இதனை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள இறுதி யுத்தத்தில் இந்தியா வகித்த வகிபாகம் தொடர்பான பல இரகசியத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு

2009ஆம் ஆண்டு தை மாதம் 27ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள பிரதி இந்தியஉயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி (Vikram Misri) இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தார். பிரணாப் முகர்ஜின் வருகை தொடர்பாக இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்கு முன்னர்தான் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது. இலங்கை வந்திறங்கிய முகர்ஜி அலரி மாளிகையில் இரண்டு மணித்தியாலங்கள் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேச்சவார்த்தை நடாத்தி விட்டு ஏறக்குறைய ஐந்து மணித்தியாலங்களுக்குள் இலங்கையினை விட்டு வெளியேறியிருந்தார். இச்சந்திப்பின் போது 2006ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையடைந்த முன்னேற்றம் தொடர்பாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிரணாப் முகர்ஜிக்கு எடுத்து விளக்கினார். இது வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைகள் தொடர்பாக மிகவும் வெளிப்படையான கலந்துரையாடலுக்கான வாய்ப்பினை முகர்ஜிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மனித உரிமைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகிய இரு விடயங்களை உத்தரவாதப்படுத்துவதே தன்னுடைய தற்போதைய கொழும்பு விஜயத்தின் உண்மையான நோக்கமாகும் என்பதை முகர்ஜி மிகவும் அழுத்திக் கூறியிருந்தார். இவ்வகையில் முகர்ஜி மனிதாபிமான சூழ்நிலைகளுடன் தொடர்புடைய நான்கு விடயங்களை உடனடியாக அமுல்படுத்தும்படி இலங்கை அரசாங்கத்திடம் அழுத்திக் கூறியிருந்தார்.

1. தற்போது வரையறுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயமானது மக்கள் பாதுகாப்பிற்குரிய வலயமாக தொழிற்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் பாதுகாப்பாக நுழையக்கூடிய மனதாபிமான நடைபாதை (Humanitarian Corridor) ஒன்றை இலங்கை இராணுவம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

2. பாதுகாப்பு வலயத்திற்குள் மருத்துவப் பொருட்களுக்கான விநியோகம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை தொடர்ந்தும் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. வன்னியை விட்டு வெளியேற விரும்புகின்ற பொதுமக்களுக்கான பாதை திறக்கப்பட்டு அது மிகவும் தெளிவாக அடையாளமிடப்படுவதுடன், மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவும் வேண்டும்.

4. மனித அழிவுகளை தவிர்க்கக் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி பொதுமக்கள் நலன் தொடர்பில் முகர்ஜியின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதுடன், பாதுகாப்பு வலயத்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து தாக்கும் விடுதலைப்புலிகளை நோக்கி இராணுவம் எறிகணைத் தாக்குதல்களை நடத்துகின்றதாயினும் இப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதை அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதேநேரம் அண்மைக்காலங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்தியும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் ஏறக்குறைய 50 பொதுமக்கள் நாளாந்தம் இறக்கின்றார்கள், இதனைவிடக் கூடிய எண்ணிக்கையானவர்கள் காயப்படுகின்றார்கள். ஒருசில விடுதலைப்புலிகள் இறக்கலாம் ஆனால் அனேகமானோர் பொதுமக்களேயாகும் என யுத்த வலயத்திற்குள்ளிருந்த ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய , பிராந்திய பாதுகாப்பு

இலங்கையினை விட்டு முகர்ஜி புறப்படுமுன் வெகுஜனத் தொடர்புசாதனங்களுக்கு விடுத்த அறிக்கையில் “இலங்கையில் அண்மைக்கால அபிவிருத்தியை கவனத்தில் கொண்டுள்ளோம். பரஸ்பரநலன், பிராந்திய விடயங்கள் உட்பட இலங்கை இந்திய உறவின் முழுவிடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. இலங்கை இந்திய உறவு பலமாக அபிவிருத்தியடைகின்றது. இலங்கை ஜனாதிபதி இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கான நம்பிக்கையினை கொண்டுள்ளார். எல்லா இலங்கையர்களும் குறிப்பாக மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களும் மிகவிரைவில் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பக்கூடிய சூழ்நிலையினை உருவாக்க இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் எல்லோரும் பணியாற்றவுள்ளோம். இலங்கை அரசாங்கம் மோதலினால் தமிழ் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கவும், பாதுகாப்பு வலயங்களை மதிக்கவும் உத்தரவாதம் தந்துள்ளது.”

பிரணாப் முகர்ஜி இலங்கையில் வெளியிட்ட அறிக்கை ஒருவிடயத்தினை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியது. அதாவது இலங்கையில் நிகழும் யுத்தத்தினை இந்தியா எதிர்க்கவோ தடுக்கவோ போவதில்லை. இலங்கை இராணுவம் அடையப்போகும் இராணுவ வெற்றியின் மூலம் இலங்கை முழுவதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் முப்பது வருடங்களின் பின்னர் இயல்பு வாழ்க்கையினை மீண்டும் தோற்றிவிப்பதற்குக் கிடைத்த அரசியல் சந்தர்ப்பமாகும். இந்தியாவினதும், இலங்கையினதும் இறுதி விருப்பம் இதுவேதான். இதன் மூலம் இந்தியா தனக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்படக் கூடிய தேசிய, பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை இலங்கை இராணுவத்தினைப் பயன்படுத்தி இல்லாதொழித்துள்ளது.

இறுதிநேர முயற்சி

2009ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகருடன் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் கலந்து கொண்ட கூட்டத்தில் இலங்கையின் வடமாகாணத்தில் நிகழும் யுத்தம் தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் நிகழ்ந்த கலந்துரையாடல் தொடர்பாகத் தெரிவித்த விடயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் நிகழ்த்தும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை தலையீடு செய்யவோ அல்லது யுத்த நிறுத்தம் செய்ய முயற்சிக்கவோ தேவையில்லை. இலங்கைக்கு ஆலோசனை வழங்கும் சூழல் இப்போது கைநழுவிச் சென்றுவிட்டது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடும்போக்காளர்கள் தவிர்ந்த ஏனையோர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மட்டும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கலாம். இதற்கு இலங்கை அரசாங்கத்தினை இணங்கிவரச் செய்யமுடியும். ஆனால் இதனைச் செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதுடன் எவ்வகையில் இதனைச் செய்வது என்பதும் பிரதான பிரச்சினையாகவுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.

ஆயினும் இந்திய அரசாங்க அமைச்சரவை இராணுவ நடவடிக்கையினை நிடைநிறுத்தி யுத்த வலயத்திற்குள் அகப்பட்டுள்ள பொதுமக்களின் பதட்டத்தினைத் தணித்து ஆறுதல் வழங்கும்படி சிவசங்கர் மேனன், மற்றும் நாராயணன் ஆகியோரை கொழும்பிற்கு அவசரமாக அனுப்பி கேட்டுக் கொண்டது. இதனை இலங்கை ஜனாதிபதி தனது அமைச்சர்களுடன் ஆலோசித்த பின்னர் பத்து கிலோமீற்றர் சுற்றுவட்டத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அகப்பட்டுள்ளனர். எனவே இறுதி முடிவு எட்டப்படும் வரை யுத்தத்தினை இடைநிறுத்த முடியாது என அறிவித்துக்கொண்டார்.

ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தை நிகழுமாயின் அதனை இந்திய அரசாங்கம் எதிர்க்காது என்ற ஊகத்தினடிப்படையில் வன்னயில் நிகழும் மோதலை சுமூகமானதொரு நிலைக்குக் கொண்டுவர முடியும் என நம்பியதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இந்தியா உட்பட ஏனைய அரசுகளின் பங்குபற்றுதலுடன் பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்க முடியும் என நம்பியது. மூன்று வாரங்கள் கழித்து இலங்கைக்கான பிரித்தானிய விசேட தூதுவர் வைகாசிமாதம் 6ஆம், 7ஆம் திகதிகளில் புதுடெல்லிக்கு விஜயம் செய்து இலங்கை அரசியல் தொடர்பிலும்,மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பிலும் இணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது பிரபாகரனுடன் பேசுவது யார் என்றதொரு கேள்வியை சிவசங்கர் மேனன் எழுப்பியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் கணிப்பின் படி இடப்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சிலர் பிரபாகரனுடனும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனியுடனும் தொடர்பில் இருக்கின்றார்கள். ஆனால் இங்குள்ள பிரச்சினை யாதெனில் இவர்கள் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசக்கூடிய வல்லமையுள்ளவர்களா? என்பதேயாகும். சிவசங்கர் மேனன் உட்பட பலரிடம் பிரபாகரன் தான் சந்திக்கப் போகின்ற யுத்த சூழ்நிலையினை புரிந்து வைத்துள்ளார் என்ற அபிப்பிராயமும் இருந்துள்ளது. மேலும் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாதுகாப்புத்தேடித் தப்பியோடும் தமிழ் மக்களைத் தனித்திருந்து பாதுகாக்கும் வல்லமை குறைந்தவராக பிரபாகரன் உள்ளார். ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகள் பிரபாகரனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தமது உயிரைப் பணயம் வைத்துத் தமது இறுதி அழிவினைச் சந்திப்பார்கள் என்ற கருத்து இந்தியாவிடம் இருந்துள்ளது.

இந்தியஉயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக இந்தியாவின் கணிப்பீட்டினை இராஜதந்திரிகளுக்குப் பின்வருமாறு விளக்கியிருந்தார். “வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான சிக்கல் தொடர்பில் புதுடெல்லி கவலை கொண்டுள்ளது. தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய உயர்மட்டத்திலான பாதிப்பினால் தமிழ்நாடு மாத்திரமன்றி இந்தியா முழுவதும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. எனவே வைகாசி மாதம் 13ஆம் திகதி தமிழகத்தில் நிகழப்போகும் சட்டசபைத் தேர்தலினால் இந்தியா அரசியல் அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதால் யுத்தமுனையில் இருக்கும் இலங்கை இராணுவத்தின் வேகத்தினை யாரும் விரும்பினால் தணிக்க முடியும் என இந்தியா தெரித்தது. ஆனால் வைகாசி மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துக் கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளை இடைநிறுத்தாது இறுதி வெற்றி கிடைக்கும் வரை யுத்தத்தினைத் தொடர விரும்பிய இந்திய அரசாங்கம் யுத்தவலயத்திற்குள் பொதுமக்கள் சிக்கக் கூடிய ஆபாயம் இருப்பதாக பல தடவைகள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், அதனைத் தடுப்பதற்குச் செய்யக் கூடிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு வலியுறுத்தி வந்தது. ஏனெனில் பொதுமக்களுக்கு எற்படக்கூடிய எல்லாவகையான பாதிப்புக்களும் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையினை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியினை சர்வதேசரீதியில் திரட்டுவதில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும் என்பதை இந்தியா முன்னுணர்ந்து இவ் ஆலோசனையினை வழங்கியிருந்தது.

இந்தியாவின் இலக்கு

வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இந்தியா நியாயம் கூறிக் கொண்டிருந்தது மாத்திரமன்றி இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் நியாயம் கூறிக் கொண்டிருந்தது. அதேநேரம் யுத்தத்தினை நிறுத்துவதற்கு மேற்குலக நாடுகள் மேற்கொண்ட எல்லாச்செயற்பாடுகளையும் ஆதரிக்காமல் தந்திரமாக அவற்றைத் தடுத்து நிறுத்தியுமிருந்தது. இதற்காக இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடையும் இறுதிக்காலப்பகுதியில் புதுடெல்லி உலகின் நாலாபக்கமும் செயற்பட்டு யுத்தத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தினை தரமுயர்த்துவதற்கான செயற்பாடுகளிலிருந்து சர்வதேச நாடுகள் தமாகவே விலகிக்கொண்டதுடன், இப்பணி இந்தியாவுடன் சேர்த்து இறுக்கிக் கொள்ளப்பட்டது. அதேநேரம் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை முன்வைக்க இலங்கை அரசாங்கத்தினை தூண்டக் கூடிய பொறிமுறையினையும் இந்தியா உருவாக்கவில்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்குப் பின்னர் எடுத்துக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக இந்தியாவிற்கு எவ்வித அக்கறையும் இருக்கவில்லை. இந்தியாவினைப் பொறுத்தவரை இலங்கையை தமிழீ விடுதலைப் புலிகள் பூரணமாக இல்லாதொழிக்கப்பட்ட ஒரு நாடாகப் பார்ப்பதே அதன் ஒரே குறிக்கோளாக இருந்துள்ளது எனலாம்.

 

Share

Who's Online

We have 127 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.