Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

  • தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    Tuesday, 15 October 2013 23:38
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • State Institution- A View of Executive Branch

    State Institution- A View of Executive Branch

    Tuesday, 15 October 2013 23:34
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...

Around the World

  • Han Duck-soo declares candidacy in June 3 election to replace impeached ex-president Yoon Suk-yeol.

    Read more...
  • An aid ship heading to Gaza has sent out a distress signal after crew members say it was hit in a drone attack.

    Read more...
  • US President Donald Trump overseeing 'troubling deterioration' in press freedom in US, Reporters Without Borders says.

    Read more...
  • Israel has ramped up attacks on Syria following a week of sectarian violence against the Druze community.

    Read more...
  • The roots of this decades-long conflict between India and Pakistan go back to the turbulent partition of 1947.

    Read more...
  • Social media campaign depicts fictional scenes of officials becoming disillusioned with ruling Chinese Communist Party.

    Read more...
  • These are the key events on day 1,163 of Russia’s war on Ukraine.

    Read more...
  • Ministry of Commerce says 'door is open' to talks, but it is willing to 'fight to the end' otherwise.

    Read more...
  • Lawyers say the Trump administration's efforts to deport Badar Khan Suri violate his freedom of speech and association.

    Read more...
  • Syrian Druze leader condemns 'genocidal campaign' after dozens killed in clashes south of Damascus.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.01 , 2012.09.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 1979ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய மத்திய அரசாங்கம் உருவாக்கும் கூட்டு அரசாங்கத்தின் பங்குதாரர்களில் ஒருதரப்பாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அங்கம் வகித்து வருகின்றன. இது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் சிந்திக்கும் விதம், கொள்கை உருவாக்கும் விதம் என்பவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மன்மோகன்சிங் அரசாங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தினையும் அதன் தலைவரையும் இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கை வட்டத்திற்குள் இழுத்து வைத்துக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்குமளவிற்கு அதனை வற்புறுத்தி இணங்க வைத்து வருகின்றது. இவ் இணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு புதிய உலகஅரசியல் ஒழுங்கு, பயங்கரவாதத்தினைச் சகிக்க முடியாமை, இந்தியாவின் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு பிராந்திய வல்லரசுக் கனவு போன்றன பேணப்படுவதற்கு இலங்கை தொடர்பாக மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள கொள்கைக்கு கருணாநிதி ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமகால உலக ஒழுங்கிற்கு ஏற்ப இந்துசமுத்திரப்பிராந்தியத்தின் முக்கியத்துவமும், அதில் இந்தியாவின் முக்கியத்துவமும் கலைஞர் கருணாநிதிக்கும், செல்வி ஜெயலலிதாவிற்கும் நன்கு தெரிந்தவைகளேயாகும். இப்பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டத்தினை தமிழ்நாட்டிலுள்ள இருபெரும் அரசியல் கட்சிகளும் தமது அதிகாரப் போராட்டத்திற்கான துரும்புச் சீட்டாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளுகின்றன என்பது இங்கு விவாதிக்கப்படுகின்றது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாட்டு அதிகாரப் போராட்ட அரசியலில் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல்காலங்களில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமது வலுவான கிளர்ச்சிகளை இலங்கைத் தமிழர்கள் விவகாரங்கள் தொடர்பில் வெளிப்படுத்தி வருகின்றன. யுத்தகாலப் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன இலங்கைத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா இலங்கை பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாகத் தந்திரமாகப் பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டு அரசியலின் அதிகாரப் போராட்டத்தில் மிகவும் ஆழமாகவும், அனுதாபமாகவும் இலங்கைத் தமிழர் விடயம் பார்க்கப்பட்டதால் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின. இந்தியாவின் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி “தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் பொதுத் தேர்தல் காலத்தில் இலங்கைத் தமிழர் பற்றிப் பேசாமல் விடுவது தேர்தல் தோல்விக்குக் காரணமாகி விடலாம் என்றதொரு அச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பாகத் தேர்தல் பிரசாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்கம் பேசத் தொடங்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் “இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் நிர்வாக அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் சிங்களப் பெரும்பாண்மை மக்களுக்குச் சமமான அந்தஸ்த்தினைப் பெற்று வாழமுடியும். இதன்மூலம் உள்நாட்டு யுத்தத்திற்கும் முடிவு காணலாம்” எனத் தெரிவித்திருந்தது. இக்காலத்தில் செல்வி ஜெயலலிதா தமிழீழத்தினை நிராகரித்திருந்தார் என்பதே உண்மையாகும்.

2006ஆம் ஆண்டு இலங்கையில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி உச்சநிலையிலிருந்த போது ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்து கொண்டிருந்தனர். அத்தருணத்தில் இதுதொடர்பாக கருத்துவெளியிட்ட செல்வி ஜெயலலிதா “யுத்தம் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம்” எனக்குறிப்பிட்டிருந்தார். ஆனால் யுத்தத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட உயிர்ச் சேதங்களை ஒளிநாடா, இறுவட்டுக்கள் மூலம் பார்வையிட்டதால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அனுதாப அலையினைத் தனது தேர்தல் பிரச்சாரத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பிய செல்வி ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தமிழீழம்தான் எனக் கூறத் தொடங்கினார். அவருடைய வார்த்தையில் கூறினால் “நான் ஒரு போதும் தமிழ் அரசுதான் ஒரே தீர்வு எனக் கூறவில்லை. நான் அரசியல் தீர்வு பற்றியே கூறிவந்தேன். ஆனால் இப்போது இலங்கையின் மோதலுக்கு நிரந்தரத் தீர்வு தமிழீழம் மட்டும்தான் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன்”. முன்னர் தமிழீழத்தினை நிராகரித்திருந்த செல்வி ஜெயலலிதா இப்போது தனது தேர்தல் வெற்றிக்காக தமிழீழம்தான் இறுதித்தீர்வு எனவாதிடுகின்றார்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்கட்சியாக இருந்தது. நிபுணர்குழு அறிக்கை வெளியிடப்பட்டபோது இது ஆளும் கட்சியாகியிருந்தது. இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் தெளிவற்ற கொள்கையினைக் கொண்டிருக்கும் இக்கட்சியின் சார்பில் முதலமைச்சர் செல்வி ஜே. ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காக இலங்கை ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இந்தியா இலங்கைக்கு எதிராகப் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் படும் துன்பங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இது செல்வி ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டின் மற்றொரு பரிமாணமாகும்.

திராவிட முன்னேற்றக்கழகம்

இலங்கையில் நிகழும் யுத்தத்தினை நிறுத்துவதற்காக தனக்குத் தானே தீ மூட்டி முத்துக்குமார் மரணித்தபோது அதனை ஏழனம் செய்திருந்த கலைஞர் கருணாநிதி அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மாணவர் எழுச்சியை அடக்கியிருந்ததுடன், தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்த சீமானையும் கைது செய்திருந்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில் எழும் எழுச்சியை கட்டுப்படுத்தும் பலம் தனக்கு இருக்கிறது என்பதை மத்தியரசிற்கு காட்டியிருந்தார். இலங்கையில் யுத்தம் உச்சநிலையிலிருந்தபோது அதனைத் தடுப்பதற்கு முயற்சிக்காத கலைஞர் கருணாநிதி யுத்தம் முடிவடையும் தருணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். இப்போராட்டம் ஆரம்பமாகி மூன்றாம் நாள் இலங்கையில் விமானக் குண்டு வீச்சு நிறுத்தப்பட்டு பீரங்கித் தாக்குதலும், துப்பாக்கிப் பிரயோகமும் தொடர்வதாக அவருக்கு அறிவிக்கப்பட்டபோது “மழைவிட்டும் தூவானம் விடவில்லை” என்ற அடைமொழியுடன் கலைஞர் கருணாநிதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை முடித்துக்கொண்டார். அதற்குமேல் அவர் எதனையும் இலங்கைத் தமிழ் மக்களுக்காக செய்யவிரும்பாதவராக இருந்தார்.

இலங்கையில் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் சமத்துவமாக வாழ்வதற்குரிய சூழல் உருவாக்கப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விடுத்த அறிக்கையில் “ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை உத்தியோகபூர்வமாக இரண்டுநாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு விட்டது. யுத்தத்தின் இறுதியில் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கைமீது யுத்தக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கு தேவைப்பட்டால் கூட்டுக் கட்சிகளுடன் ஆலோசனை நடாத்தி தீர்மானங்களை எடுக்கலாம்” எனக் கூறியதுடன் தனது பணியை நிறுத்திக் கொண்டது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழக சட்டசபையில் அப்பொழுது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர் தொடர்பாகப் பின்வருமாறு கருத்துக் கூறியிருந்தார். “தமிழீழத்தையடைதல் என்ற கொள்கை யதார்த்தமான கொள்கையல்ல. நெகிழ்ச்சியான கொள்கையினைப் பின்பற்றுவதுடன், சிங்கள மக்கள் பற்றிக் குற்றம் காணுகின்ற, கோபப்படுத்தக்கூடிய, வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள் தெரிவிப்பதைத் தமிழர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தமிழர்களின் நலன்களுக்கு இது பாதகமாக அமைந்துவிடும். காலத்தேவை கருதி இலங்கைத் தமிழர்கள் சமஉரிமைகள், மொழி உரிமைகள், அதிகாரப்பகிர்வு என்பவற்றைப் பெறுவதற்குப் பிராந்திய மட்டத்தில் போராட வேண்டும்”. இத்தருணத்தில் கலைஞர் கருணாநிதிக்கு இலங்கைத் தமிழ்மக்களுக்குத் தமிழீழம் கிடைப்பது அவசியமற்றதொன்றாக இருந்தது.

தமிழ்நாட்டில் இழந்திருக்கும் தனது அரசியல் அதிகாரத்தினையும் செல்வாக்கினையும் மீளவும் கைப்பற்றிக் கொள்ள கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் இலங்கைத் தமிழர்கள் தேவைப்படுகின்றார்கள். இதற்காக 1985ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் கலைக்கப்பட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பிற்கு (Tamil Eelam Supporter’s Organization – TESO) மீண்டும் புத்துயிரளித்து 2012ஆம் ஆண்டு ஆவணிமாதம் 12ஆம் திகதி சென்னையில் மகாநாடு ஒன்றினை கலைஞர் கருணாநிதி நடாத்தியுள்ளார். மகாநாடு நடாத்தப்படுவதற்கு முன்னர் தமிழ் ஈழம் தொடர்பாக இவர் பின்வருமாறு மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார். “சிங்களவர்களை ஒருபோதும் நம்பமுடியாது. நம்பவைத்து கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதமிருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதிமொழியை அளித்துவிட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர். இனியும் தமிழ்மக்களால் சிங்களவர்களுடன் இணைந்து வாழமுடியாது. தமிழர்களுக்கென தனிநாடு, தமிழ் ஈழநாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”. தமிழ்நாட்டு அரசியல் அதிகாரப் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான காங்கிரஸ்கட்சி இலங்கைத் தமிழர் துன்பத்தின் மீது தனது அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது. அதேநேரம், இலங்கை தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கைக்கு முழுமையான ஆதரவினைத் தெரிவிக்கும் கொள்கையினையே திராவிட முன்னேற்றக் கழகம் பின்பற்றி வருகின்றது. இறுதியில் இலங்கை விடயம் தொடர்பான மத்திய அரசாங்கத்தின் பாதையில் தான் தனது கால்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் பதித்துச் செல்கின்றது. தமிழ்நாட்டு அரசியல் அதிகாரப் போராட்டத்தில் முழுமையாக வெற்றிகொள்வதே கருணாநிதியின் இலக்காக இருக்கின்றதேயன்றி, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவது அவரின் இலக்காக இருக்கவில்லை. கருணாநிதியின் அதிகாரப் போராட்டத்திற்கு எல்லாவற்றையும் இழந்து போயுள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பதுதான் வேதனையான விடயமாகும்.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தமிழ் இராணுவக்குழுக்களுக்கு இராணுவப் பயிற்சியை இந்தியா 1980 களின் பின்னர் வழங்கியமை யாவரும் அறிந்ததாகும். ஆயினும் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டினை எடுக்கும் தமிழ்நாடு இதற்காக பயன்படுத்தப்பட்டதே அதிகமாகும். தமிழ் இராணுவக் குழுக்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டிருந்த இக்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் தொடர்பிலிருந்தனர். இக்காலத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமது கட்சி சார்ந்த நலன்களுக்குப் பயன்படுத்தியிருந்தனர் என்ற உண்மையினை யாரும் மறுக்கமுடியாது. வெளிப்படையாகக் கூறினால் இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை தமிழ்நாட்டிலிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் தமது தேர்தலுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இதற்குள் திராவிட முன்னேற்றக்கழகமும் அடங்கும். இங்கு துன்பம் யாதெனில் தேர்தலின் பின்னர் திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பான தனது கட்சிக் கொள்கையினை முழுமையாக மாற்றிக் கொள்வதேயாகும். எதிர்கால தேர்தலுக்காகவும், சந்தர்ப்பவாத தமிழ்நாட்டு அரசியலுக்காகவும் மீண்டும் இலங்கைத் தமிழர்கள் பணயம் வைக்கப்படுகின்றனர்.

இன்றைய தேவை

தமிழீழ அரசு தான் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ற கருத்திலிருந்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மீளவேண்டும். இவர்கள் இதிலிருந்து மீளாவிட்டால் மீண்டும் இலங்கைத் தமிழ் மக்களை மீளாத்துயருக்குள்ளாக்கி விட்டு கைகட்டி வேடிக்கைபார்க்கும் குரூரமானவரகளாக வரலாறு மீண்டும் இவர்களைச் சித்தரிக்கும். உண்மையில் எந்தவொரு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் இந்தியாவின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவம், இந்தியாவின் பிராந்திய வல்லரசுநலன் என்பவைகளைக் கருத்திலெடுத்து “தமிழீழ ஆதரவு” நிலையினை எடுத்திருக்கவில்லை. தமிழ் ஈழம் தொடர்பான மத்திய அரசின் கொள்கை தொடர்பாக இக்கட்சிகளுக்கு நன்கு தெரியும். அவ்வாறிருந்தும் தமிழீழ ஆதரவு நிலையினை எடுத்து இவர்கள் பல சந்தர்பங்களில் அரசியல் கோமாளிகளாக்கப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் அரசியல் தமிழ்நாட்டு அரசியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தினை உரத்துக் கூறி அரசியல் இலாபம் சம்பாதிக்க வேண்டிய சூழலிலேயே இன்றும் உள்ளன என்ற யதார்த்தத்தை இலங்கைத் தமிழ்மக்கள் புரிந்துகொண்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்படவேண்டும். ஏனெனில் வரலாற்றில் இலங்கைத் தமிழர் விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் மீது எவ்வித கொள்கை மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாத நிலையிலேயே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இருந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இதயசுத்தியுடன், தாம் சார்ந்த அரசியல் நலன் கடந்து நல்லது செய்ய விரும்பின் இந்தியாவின் பிராந்திய வல்லரசுநலன், புவிசார் அரசியல் என்பவற்றை உள்வாங்கி அதற்கு ஏற்ற வகையில் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்க முயற்சிக்கலாம். அதற்கு அப்பால் சென்று யாரும் செயற்பட முடியாது என்ற யதார்த்தத்தையும், அறிவுசார்ந்த நிலையிலிருந்தே பூகோள அரசியலை பார்க்க வேண்டும் என்ற அறிவினையும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் எல்லா மக்களுக்கும் வழங்கலாம்.

 

Share

Who's Online

We have 78 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.