Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    Tuesday, 15 October 2013 23:38
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
  • Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

    Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

    Tuesday, 15 October 2013 23:29
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...

Around the World

  • Han Duck-soo declares candidacy in June 3 election to replace impeached ex-president Yoon Suk-yeol.

    Read more...
  • An aid ship heading to Gaza has sent out a distress signal after crew members say it was hit in a drone attack.

    Read more...
  • US President Donald Trump overseeing 'troubling deterioration' in press freedom in US, Reporters Without Borders says.

    Read more...
  • Israel has ramped up attacks on Syria following a week of sectarian violence against the Druze community.

    Read more...
  • The roots of this decades-long conflict between India and Pakistan go back to the turbulent partition of 1947.

    Read more...
  • Social media campaign depicts fictional scenes of officials becoming disillusioned with ruling Chinese Communist Party.

    Read more...
  • These are the key events on day 1,163 of Russia’s war on Ukraine.

    Read more...
  • Ministry of Commerce says 'door is open' to talks, but it is willing to 'fight to the end' otherwise.

    Read more...
  • Lawyers say the Trump administration's efforts to deport Badar Khan Suri violate his freedom of speech and association.

    Read more...
  • Syrian Druze leader condemns 'genocidal campaign' after dozens killed in clashes south of Damascus.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.22 , 2012.09.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

1952ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையும் சீனாவும் இலங்கை - சீனா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டதுடன், இரு தரப்பினருக்கம் இடையில் வர்த்தக உறவுகளை மேன்மைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. ஆயினும் 1957ஆம் ஆண்டு மாசி மாதம் தொடக்கம் உத்தியோகபூர்வமாக இராஜத்திர உறவுகளை ஆரம்பித்திருந்தது. அன்று தொடக்கம் இலங்கை தொடர்பில் சீனா கவனம் அல்லது அக்கறை செலுத்தி வந்துள்ளது. இவ் அக்கறையானது அரசியல் நலன் சார்ந்தது என்பதை விட தந்திரோபாய நோக்கிலானது என்பதே பொருத்தமானதாகும். இலங்கையின் இனமோதலை இலங்கையின் உள் விவகாரமாகச் சீனா கருதி வந்தாலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியமான வல்லரசு என்ற வகையில் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்து வந்துள்ளது. இவ்வகையில் இலங்கைக்கான பிரதான ஆயுத விநியோகத்தராக சீனா இருந்துள்ளது எனலாம். 1984ஆம் ஆண்டு புதியரக இராணுவத் தளபாடங்களை விநியோகம் செய்ய உடன்பட்டுக் கொண்டது. இதனடிப்படையில் 1984ஆம் ஆண்டிலிருந்து தாக்குதல், தற்பாதுகாப்பு இராணுவத் தளபாடங்களை இலங்கைக்கு வழங்கி வந்துள்ளது. ஒரு வகையில் இலங்கைக்கு உதவி செய்தல் என்ற போர்வையில், தனது இராணுவத் தளபாட வர்த்தகத்தில் சீனா அதிகம் கவனம் செலுத்தியிருந்தது என்றும் கூறலாம். இதன் தொடர்சியாகவே இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சமகால உறவினை நோக்குதல் வேண்டும்.

யுத்தத்திற்குப்பின்னரான உதவிகள்

2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் (UNHRC) இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்திய போது, உள்நாட்டு யுத்தமானது இலங்கையின் உள்விவகாரம், அது சர்வதேச பாதுகாப்பிற்கு எவ்விதத்திலும் ஆபத்தானதல்ல எனக்கூறி இலங்கைக்கு எதிரான பிரேரணையினை தடுத்திருந்தது. அதேநேரம் இலங்கை தனது உள்நாட்டுப் போர் வெற்றியை அறிவித்ததுடன் அதனை உடனடியாக சீனா வரவேற்றும் கொண்டது. வரையறையற்றுக் கிடைத்த சீனாவின் இராணுவ உதவியானது யுத்தத்தினை வெல்லமுடியும் என்ற பெரும் நம்பிக்கையினை இலங்கைக்கு வழங்கியிருந்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசாங்கம் வெகுஜனத்தொடர்பு சாதனங்களைப் பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுவதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை இயற்றிக் கொண்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் யுத்ததிற்குப்பின்னரான மீள்கட்டுமானப்பணிகளுக்கு சீனா தனது பங்களிப்பினை முதன்மைப்படுத்தி இருதரப்பு உறவுகளை ஆழமாக்கிக் கொள்ளவதற்கு முக்கிய இடம் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாகவே நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழுவின் நோக்கம் அமைந்திருந்தது. இத்தூதுக்குழுவிற்கு சீனாவின் தேசியக்காங்கிரஸ்சின் தலைவர் வூ பங்குவோ (Wu Bangguo) தலைமை தாங்கியிருந்தார். சீனத்தூதுக்குழுவின் தலைவருக்கும் இலங்கை ஜனதிபதிக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் 17.09.2012 இல் கைசாத்திடப்பட்டன. முக்கியமாக பதினாறு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் அடிப்படைக் கட்டமைப்பத் திட்டங்களாகும். போக்குவரத்திற்கான உள்கட்டுமான அபிவிருத்தி, உல்லாசப்பிரயாணத்துறை, தொலைத் தொடர்பு,துறைமுக அபிவிருத்தி, கொழும்பு தாமரை கோபுர திட்டம் (Lotus Tower) கைத்தொலைபேசிகளுக்கான 4G அலைக்கற்றை வலைப்பின்னல் விஸ்தரிப்பு, அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் இரண்டாம் கட்டத்திற்கான நிதியுதவி, சக்திவள அபிவிருத்தி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைநெறி நிலையத்திற்கான தொழில்நுட்ப உதவிகள், என்பன உட்பட பல்வேறு திட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. இதனைவிட கடல் மற்றும் கடற்கரை கூட்டுறவு, நிதிக் கூட்டுறவு ஆகிய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன.

இவ்ஒப்பந்தங்கள் மகிந்தா ராஜபக்சாவின் கனவாகிய இலங்கையினை ஆசியாவின் அதிசயமாக்குவது என்பதை நனவாக்க உதவும் என சீனா கூறியுள்ளதுடன் இலங்கை மீது சீனா வைத்துள்ள நம்பிக்கையினை மேலும் வலுவூட்டுவதாக இவ் ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன. மேலும் சீனாவினை ஆசியாவில் வல்லரசாக மாற்றும் வகையில் இவ்ஒப்பந்தங்கள் அமைந்துள்ளதாகவும் சீனா கருதுகின்றது.

இலங்கை நோக்கிய சீனாவின் நகர்வினை தடுப்பதற்கு இந்தியா இலங்கையுடன் தனக்கு இருக்கக் கூடிய பிரிக்கமுடியாத பல்வேறு உறவுகளையும் பலப்படுத்த வேண்டும் என இந்தியாவிற்கு அரசியல், ராஜதந்திர, இராணுவ பகுப்பாய்வாளர்கள் ஆலோசனை வழங்கிவருகின்றனர். ஆனால் இலங்கை ராஜதந்திரிகளோ இந்தியாவினை விட சீனாவுடனேயே அதிக நட்புறவுகளைப் பேண விரும்புகின்றார்கள். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மேற்படி ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் எதிர்காலப் பாதுகாப்பினை சீனா பொறுப்பேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவிற்கு இருக்கும் எதிர்கால நலனை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்ற உதவியாகும். இதனால் பாதிக்கப்படப்போவது இந்தியாவேயாகும்.

யுத்தகாலஉறவு

இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, சமாதானம், உறுதிப்பாடு என்பவற்றை சீனா ஆதரித்து வந்தது. இதனடிப்படையில் 2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை வரவேற்றிருந்தது. 2006ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகிய போது அதனை மீண்டும் வரவேற்றிருந்த சீனா, இலங்கையின் உட்கட்டுமானத் துறையின் திருத்தப்பணிகளுக்கும் உதவி செய்வதற்குத் தான் தயாராக இருப்பதாக அறிவித்திருந்ததுடன், இலங்கையின் தேசிய உறுதி நிலைக்கும், மோதல் நீக்கம், பொருளாதார அபிவிருத்தி என்பவைகளுக்கும் தான் ஆதரவாக இருப்பதாகவும் அறிவித்தது.

2005ஆம் ஆண்டு இலங்கையும் சீனாவும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு கடந்த தசாப்தத்தில் வலுவடைந்து விரிவாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது எதிர்காலத்தில் இரு தரப்பு உறவிலும் ஏற்படக்கூடிய விரிவாக்கத்தினை வெளிப்படுத்தக்கூடிய அளவுகோலாக கொள்ளப்படத்தக்கதாகும். இலங்கையின் ஜனாதிபதி சீனாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதெல்லாம் இரு நாடுகளுக்குமிடையிலான ஆழம், பலம், பிராந்திய, சர்வதேச விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள். நீண்டகாலமாக இலங்கையுடன் சீனா கொண்டிருந்த நட்புறவினைத் தொடர்ந்தும் பேணுவதற்கு தனது அரசாங்கம் விரும்புவதாகவும், எல்லா விடயங்களிலும் கூட்டிணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோட்டாபாய இராஜபக்ச பின்வருமாறு கூறியிருந்தார். “இலங்கை ஜனாதிபதி மூன்று தடவை விஜயம் செய்துள்ளார். நான் ஐந்து தடவைகள் சென்றுள்ளேன். சில வேளைகளில் ஜனாதிபதி தொலைபேசியில் சீனப் பிரதமருடன் பேசியுள்ளார். நாம் நல்லதொரு நட்புறவினை உருவாக்கியுள்ளோம். எங்களுக்கு யார் முக்கியம் என்பதைப் புரிந்து வைத்துள்ளோம்.”

2007ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கைக்கான இராணுவ உதவிகளை இடை நிறுத்தி வைத்திருந்த பொழுது, சீனா குறிப்பிடத்தக்களவு இராணுவ தளபாட விற்பனையினை இலங்கைக்கு செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு, 37.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவத் தளபாட விநியோகத்திற்கான ஒப்பந்தத்தினை சீனா இலங்கையுடன் செய்திருந்தது. இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை வெல்லுவதற்கு உதவியாக இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்யுமாறும், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யுத்த விமானங்களை செலுத்துவதற்கான பயிற்சிகளை இலங்கையின் விமானிகளுக்கு வழங்குமாறும் பாக்கிஸ்தானையும் ஆர்வப்படுத்தி வந்துள்ளது.

2007ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு மேற் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் இலங்கையின் இன வன்முறையினை மேற்கோளாகக் கொண்டு இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ”பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீங்கு விளைவிக்கக்கூடிய படைகளை எதிர்த்து போராடுவதற்கு கூட்டாகச் செயற்படுவதுடன், பயங்கரவாதச் செயற்பாட்டிற்கு எதிராக சர்வதேச பிராந்திய மட்டங்களில் இணைப்பினையும், ஆலோசனைகளையும் உருவாக்குதல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு இணங்க 2007ஆம் ஆண்டு சித்திரை மாதத்திலிருந்து சீனா இலங்கைக்கு இராணுவ ஆலோசனைகளையும், ஆயுத உதவிகளையும் வழங்கத் தொடங்கியது. பாக்கிஸ்தானுக்கு இந்தியாவுடன் இருக்கும் கடும்பகையினைச் சாதகமாக்கிக்கொண்டு சீனா பாக்கிஸ்தானுடன் நட்புறவினைப் பேணிவருகின்றதுடன், இலங்கைக்குத் தேவையான இராணுவ உதவிகளை வருடாந்தம் வழங்கி இலங்கையுடனும் நட்புறவினைப் பேணிவருகின்றது. மறுபக்கத்தில் பாகிஸ்தானுடன் இலங்கையின் உறவினை சீனா ஊக்குவித்து வந்தது. இதனடிப்படையில் பாகிஸ்தான் இலங்கை விமானப்படை விமானிகளுக்கு பயிற்சியை வழங்கியதுடன், உள்நாட்டுப் போருக்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கும் உதவியது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசாங்கம் நடாத்திய இறுதியுத்தத்தில் சீனாவினால் வழங்கப்பட்ட Jian-7 யுத்த விமானங்கள், விமான எதிர்ப்பத் துப்பாக்கிகள், JY-11 3D விமானக்கண்காணிப்பு ராடர்கள் போன்ற கருவிகள் பிரதான வகிபாகத்தினை வகித்தன எனக்கூறலாம். சீனா வழங்கிய ஏவுகணைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான கட்டிடங்கள், பாதுகாப்பு அரண்களைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

2007ஆம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் இலங்கைக்கு சீனா வழங்கிய JY-11 3D விமானக்கண்காணிப்பு ராடர்கள் இந்திய வான்பரப்பில் சீனா செல்வாக்குச் செலுத்த உதவும் எனக்கூறி இதனைக் கண்டித்திருந்தார். இது தொடர்பாக இவர் கூறும் போது “இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாகவுள்ளது என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். ஆயுதங்களைப் பெறுவதற்காக இலங்கை சீனாவிடமோ அல்லது பாக்கிஸ்தானிடமோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். எங்களுடைய வெளியுறவுக்கொள்கை வட்டத்திற்குள் எல்லோரையும் இணைத்துக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.” இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த கூட்டும், தென்னாசிப்பிராந்தியத்தில் காலம்காலமாக செலுத்தி வந்த அதிகாரமும் சீனாவின் செயற்பாட்டினால் இந்தியாவிற்கு எரிச்சலையூட்டியிருந்தது. இதனை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் “குழம்பிய குட்டையில் சீனா மீன் பிடிக்கின்றது” என விபரித்திருந்தார்.

இலங்கையின் துணிச்சல்

இந்தியாவின் எச்சரிக்கையினையும் மீறி இலங்கை அரச படைகளுக்குச் சாதகமான இராணுவச் சமனிலை என்னும் பெயரில் சீனா வழங்கிய இராணுவ உதவிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டபூர்வமற்ற அரசினை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்குப் பயன்பட்டதுடன், அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஏறக்குறைய 5594 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பினை இழப்பதற்கும், இறுதியில் ஏறக்குறைய 85 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்புள்ள காட்டிற்குள் அவர்கள் முடக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கும் உதவியது. இவைகளை உறுதிப்படுத்தும் வகையில் 2010ஆம் ஆண்டு ஆனிமாதம் இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசாரா சமரசிங்கா வழங்கிய பேட்டியில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவு தொடர்பாக பின்வருமாறு விபரித்திருந்தார். “மோதல் காலத்தில் குறிப்பாக பாதுகாப்பினை உறுதியாகப் பேணுவதற்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு இலங்கை தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. சீனாவின் யுத்தக்கப்பல்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தந்தன. நாங்கள் எங்கள் அதிகாரிகளை பயிற்சிக்காக சீனாவிற்கு அனுப்பியிருந்தோம். எங்களுக்கு பயிற்சி வழங்குவதை சீனா அதிகரித்து வந்தது. கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் ஏறக்குறைய பதினைந்து தொடக்கம் இருபது வரையிலான கடற்படை உத்தியோகத்தர்களுக்கு சீனாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பயிற்சி வழங்கியுள்ளது.” இவைகளுக்கும் மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த யுத்தத்தினை தடுப்பதற்கும் அதன் பின்னரான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களையும் சீனா தனது வீட்டோ (Veto) அதிகாரத்தினைப் பயன்படுத்தி தடுத்திருந்தது. இது இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது.

 

Share

Who's Online

We have 29 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.