Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan

  • தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    Tuesday, 15 October 2013 23:38
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

    Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

    Tuesday, 15 October 2013 23:29
  • State Institution- A View of Executive Branch

    State Institution- A View of Executive Branch

    Tuesday, 15 October 2013 23:34
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...

Around the World

  • Labor Party leader becomes the first Australian prime minister to win second consecutive three-year term in two decades.

    Read more...
  • Ukrainian president says he and Trump agree that a 30-day ceasefire is the correct first step towards ending the war.

    Read more...
  • Ryan Garcia returns from a doping suspension to beat Rolly Romero with a unanimous points decision in New York.

    Read more...
  • Ten years ago, I watched the residents of Lesbos welcome refugees. Now the public narrative says this was a mistake.

    Read more...
  • An attack in Kashmir challenges Modi’s ‘normalcy’ narrative.

    Read more...
  • Pakistan test-fires surface-to-surface missile amid fears of military escalation with India over deadly Kashmir attack.

    Read more...
  • It's the country's second poll in less than a year after a previous election was anulled.

    Read more...
  • Snap election was triggered by removal of Yoon Suk-yeol from the presidency for declaring martial law on December 3.

    Read more...
  • Fred VanVleet scored 29 points as the Houston Rockets produce stunning 115-107 victory over the Golden State Warriors.

    Read more...
  • For three decades, Abdallah Ali Sherif has been on a mission to explore Harar's once-repressed cultural identity.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.06 , 2012.10.07 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

நிலைத்திருக்கக்கூடியதும், உடனடியாகப் பெற்றக்கொள்ளக் கூடியதுமான சக்திவளத்தினை ஒருநாடு எந்தளவிற்குப் பெற்றுக்கொள்கின்றதோ அதனைப் பொறுத்தே ஒருநாட்டினுடைய பொருளாதார முன்னேற்றமும், அபிவிருத்தியும் தங்கியுள்ளது. உலக சக்திவளத் தேவை 2006ஆம் ஆண்டிற்கும் 2030ஆம் ஆண்டிற்கும் இடையில் 45% த்தினால் அதிகரிக்கும் எனவும், இதில் அரைப்பங்கிற்கான கேள்வி சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தே ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகரித்துச் செல்லும் எண்ணெய்க்கான தேவையினைப் பூர்த்திசெய்ய மத்தியகிழக்கு நாடுகளில் சீனா தங்கியிருக்க வேண்டியுள்ளது. 1995ஆம் ஆண்டிற்கும் 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் சீனா தனது மசகு எண்ணெய்க்கான கேள்வியை இரண்டுமடங்காக அதிகரித்தது. 2020ஆம் ஆண்டளவில் இது மேலும் இருமடங்காக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனா தனது கைத்தொழில் முயற்சிக்காக நாள் ஒன்றிற்கு 7.3 மில்லியன் பரல் எண்ணெய்யினை இறக்குமதி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றது. மேலும் 2015ஆம் ஆண்டில் சீனா தனது மொத்த எண்ணெய்த் தேவையில் 70% மானவற்றை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா போன்ற பிராந்தியங்களிலிருந்து கடல்வழிப் போக்குவரத்து மூலமே இறக்குமதி செய்ய வேண்டி வரும் எனவும் எதிர்பார்க்கின்றது. இதனால் கடல்வழிப் போக்குவரத்தினைச் தனது கட்டுப்பாடில் வைத்திருக்க வேண்டும் என சீனா எதிர்பார்க்கின்றது. இவ் எதிர்பார்க்கையே முத்துமாலைத் தொடரத் தந்திரோபாயத்தின் உருவாக்கத்திற்கு காரணமாகியது.

முத்துமாலைத்தொடர்

முத்துக்களை நூலில் கோர்த்து மாலையாக்குவது போன்று ஒருநாட்டின் துறைமுகத்தைப் பெற்று அல்லது புதிய துறைமுகம் ஒன்றை அல்லது விமான நிலையங்களை உருவாக்கிச் சீனா கடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலை உருவாக்குகின்றது. இங்கு ஒவ்வொரு துறைமுகமும் அல்லது விமான நிலையமும் முத்துமாலைத் தொடரிலுள்ள ஒவ்வொரு முத்தாகக் கருதப்படுகிறது. பாரசீகக் குடாவிலிருந்து சீனா வரையிலான கடல்வழித் தொடர்பாடலுக்குச் சமாந்திரமாக சீனா தனது இராணுவத்தளங்களை உருவாக்குவதற்கு முத்துமாலைத்தொடர் உதவமுடியும். ஓவ்வொரு துறைமுகமும் விமானத்திட்டு (Airstrip) மற்றும் இராணுவத்தள வசதிகளையும் கொண்டுள்ளது. எனவே சீனா உருவாக்கியுள்ள முத்துமாலைத் தொடரின் முத்துமாலையிலுள்ள ஒவ்வொரு துறைமுகமும் பூகோள அரசியலில் சீனா எதிர்காலத்தில் அடையப்போகும் புவிசார் அரசியல் செல்வாக்கு அல்லது இராணுவ முதன்மை நிலையினை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

தென்சீனக் கடலிலுள்ள ஹெய்னன் (Hainan) தீவில் முத்துமாலைத்தொடரின் முதல் துறைமுகம் உருவாக்கப்பட்டது. இத்துறைமுகத்தில் சீனா ஏற்கனவே தனது கடல் படைத் தளத்தின் தரத்தினை உயர்த்தியிருந்தது. அத்துடன் சீனாவின் இராணுவத்திற்குரிய வசதிகள் தரமுயர்த்தப்பட்டது. தென்சீனக் கடலின் தந்திரோபாய முக்கியத்துவம் கருதி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் யுத்தக்கப்பல்களுக்கான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலைத்தேச உளவு செய்மதிகளினால் கண்டுபிடிக்க முடியாதவகையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சாதாரண கப்பல்கள் உள்நுழைந்து வெளியேறக்கூடியவகையில் அதன் நுழைவாயில் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு வியட்னாமிலிருந்து 300 கடல் மைல் தொலைவிலுள்ள வூடி (Woody) தீவில் 8000 அடி நீளமான விமான ஓடுபாதை (Airstrip), செயற்கையாக மூடக்கூடிய துறைமுகம், யுத்தக்கருவிகளைப் பாதுகாப்பாக வைக்கக் கூடிய கட்டிடங்கள், இலத்திரனியல் கண்காணிப்பு நிலையம் உட்படபல வசதிகள் கொண்ட இராணுவ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது முத்துமாலைத் தொடரிலுள்ள பிறிதொரு முத்தாகும்.

வங்காளதேசத்தில் கப்பல்களிலிருந்து கொள்கலன்களை ஏற்றியிறக்கக்கூடிய ஆழ்கடல் துறைமுகமாக சிற்றக்கொங் துறைமுகம் தரமுயர்த்தப்பட்டது. இது முத்துமாலைத் தொடரின் அடுத்த முத்தாகும். இதேபோன்று மியன்மாரில் சிற்வி (Sittwe) ஆழ்கடல் துறைமுகம் கட்டமைக்கப்பட்டது. இது முத்துமாலைத் தொடரின் பிறிதொரு முத்தாகும்.

பாகிஸ்தானின் தென் மேற்கு கரையோரத்திலுள்ள க்வாடரில் (Gwadar) கடற்படைத் தளம் ஒன்றினை சீனா கட்டமைத்துள்ளது. இது ஹேமர்ஸ் நீரிணைக்கு வெளியிலுள்ள தந்திரோபாயமிக்க இடமாகும். இது மிகவும் ஆழ்கடல் துறைமுகமாகும். மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் சீனாவிற்கு இருக்கும் சக்திவள நலன்களைப் பாதுகாப்பதற்கு இத்துறைமுகம் அவசியமானதாகும். இவ்வகையில் இத்துறைமுகமும் இங்குள்ள கடற்படைத்தளமும் சீனாவின் முத்துமாலைத் தொடரின் இன்னொரு முத்தாக மாறியுள்ளது.

இலங்கை 2000ஆம் ஆண்டு சீனாவின் ஹான்கோ நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முத்துராஜவலை, கொலன்னாவை போன்ற இடங்களில் எண்ணெய் குதங்களை அமைத்து சீனா பராமரித்து வருகின்றதுடன், சந்திரிக்கா பண்டாராநாயக்கா குமாரணதுங்க ஐனாதிபதியாக இருந்த காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் பற்றி கலந்துரையாடப்பட்டு, ஐனாதிபதி மஹிந்த இராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இப்பணி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அம்பாந்தோட்டைத் துறைமுகம் மலாக்கா நீரிணை, சுயெஸ் கால்வாய் மற்றும் ஆசியா, ஐரோப்பியக் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ளது. இதற்கு றுகுணு மகம்புற சர்வதேசத் துறைமுகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. (Ruhunu Magampura International Port) இது முத்துமாலைத் தொடரின் இன்னொரு முத்தாகும்.

ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர் செலவில் அம்பாந்தோட்டையில் உருவாக்கப்படும் புதிய துறைமுகத்திற்கான செலவில் 85% மானவற்றை சீனா வழங்குகின்றது. இத்திட்டம் நான்கு கட்டங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்படுகின்றதுடன், முதற்கட்டப்பணி பூர்த்தி செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கை ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் பதினைந்து வருட காலத்திற்குள் பூரணமாக பூர்த்தி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ் வேலைத் திட்டத்தின் முதற்கட்டப் பணி 2007ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. இத்துறைமுகத் திட்டத்திற்குள் கைத்தொழில் பொருட்களை ஏற்றி இறக்கக்கூடிய 1000 மீற்றர் நீளமுடைய இறங்குதுறை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளக்கப்பட்டிருக்கும். மேலும் எரிவாயுவினால் இயங்கக் கூடிய மின்னிலையம், கப்பல் தரிக்குமிடம், கப்பல் எரிபொருள் நிரப்பு நிலையம், விமானங்களுக்குத் தேவையான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும், சேமிப்புநிலையம், பெற்றோலிய வாயுவினைத் திரவமாக்கும் நிலையம் என இவை விரிவாக்கமடைந்துள்ளது.

இத் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2014ஆம் ஆண்டு பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு 810 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்யப்படவுள்ளது. நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சீனத் தூதுக்குழுவின் தலைவர் வூ பங்குவோவிற்கும் இலங்கை ஜனதிபதிக்கும் இடையில் 17.09.2012 இல் கைசாத்திடப்பட்ட பதினாறு ஒப்பந்தங்களில் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தியின் இரண்டாம் கட்டத்திற்கான நிதியுதவிக்கான ஓப்பந்தமும் அடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இத் துறைமுகத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் 2023ஆம் ஆண்டு பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் அம்பாந்தோட்டையில் உருவாகும் துறைமுகம் முழுமையான வர்த்தகநோக்கிலானது என சீனா வலியுறுத்தி வந்தாலும், அனேக இந்திய, ஐக்கிய அமெரிக்க இராணுவத் திட்மிடலாளர்களைப் பொறுத்தவரை சீனாவின் முத்துமாலைத் தொடரின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகின்றது. ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி டிபன்கர் பெனெர்ஜி (Dipankar Banerjee) இது தொடர்பாகப் பின்வருமாறு கூறியிருந்தார். “அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவின் வர்த்தகத்திற்கான துணிகரச்செயலாகும். ஆனால் எதிர்காலத்தில் சீனா தந்திரோபாய நிலைப்பாட்டினை எடுப்பதற்கு இது மிகவும் பயனுள்ள இடமாகும்”. எனவே அம்பாந்தோட்டையில் உருவாக்கப்படும் இம்முத்தானது எதிர்காலத்தில் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனா நடாத்தப்போகும் பாரிய அரசியல், இராணுவ விளையாட்டுக்களுக்கான விசைத்திறனை வழங்கப்போதுமானது எனக் கூறப்படுகின்றது.

சீனாவின் முத்துமாலைத்தொடர் பாரசீகக்குடா வரையில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சீனாவின் முத்துமாலைத் தொடரில் துறைமுகங்கள், விமானப் படைத்தளங்கள், தந்திரோபாய கட்டமைப்புக்களும் உள்ளடக்கப்பட்டு வேகமாக நவீனமயப்படுத்தப்பட்டன. சீனாவின் பிரதான தரைப்பகுதியிலுள்ள கடற் பிரதேசத்திலிருந்து தென் சீனக் கடலிலுள்ள கடலோரப்பகுதி, மலாக்கா நீரிணை , இந்து சமுத்திரப் பிராந்தியம், அராபியக் கடலிலுள்ள கடலோரப் பகுதி, பாரசீகக் குடா ஊடாக முத்துமாலைத் தொடர் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வரையில் கடல்வழித் தொடர்புகளை உருவாக்கும் திறனை விருத்தி செய்து சீனா தந்திரோபாய உறவுகளை கட்டமைத்து வருகின்றது.

இலங்கையில் சீனாவின் அக்கறை

இந்துசமுத்திரப்பிராந்தியத்தல் மலாக்கா நீரிணைக்கு அருகில் அமைந்திருக்கும் இலங்கை சீனாவின் கடல்வழிப் போக்குவரத்தினைப் பாதுகாக்கக்கூடிய தந்திரோபாய மையத்தில்அமைந்துள்ளது. இதனால் சீனா இலங்கையில் அதிகளவான முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வகையில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட “நகர் உறவு நட்புறவினை ஸ்தாபித்தல்” (Establishment of Friendship City Relationship) என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்கான உட்கட்டுமான வசதிகளைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது. இவ் அபிவிருத்தி வலயத் திட்டத்தின் கீழ் துறைமுக வசதிகளைக் கட்டுதல், குதப்பண்ணை, (Tank Farm) நிலக்கீழ் சேமிப்பறை (Banker) வசதிகளை ஏற்படுத்துதல் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.

அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டத்திற்குப் புறம்பாக வேறு பல உட்கட்டுமானப் பணிகளையும் சீனா மேற்கொண்ட வருகின்றது. இவ்வகையில் அம்பாந்தோட்டையிலிருந்து வடக்குத் திசையில் 15 கிலோமீற்றர் தூரத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தினை சீனா கட்டிவருகின்றது. இதற்கான முதல் கட்டப் பணிகள் 2009ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பமாகி, 2012ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக சீன அரசாங்கம் 209 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்கின்றது. மேலும் 248 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தினையும் கொழும்பினையும் இணைக்கும் அதிவேக நெடும்சாலையினை சீனா கட்டமைத்து வருகின்றது. இதனைவிட 855 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நுரைச்சோலையில் நிலக்கரியில் இயங்கம் மின்நிலையத்தினை உருவாக்கியுள்ளது. மீரிகமவில் சீன முதலீட்டாளர்களுக்காக விசேட பொருளாதார வலயத்தினை நிர்வகிக்கின்றது.

தந்திரோபாய நோக்கங்கள்

இலங்கையில் உருவாக்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட்ட எல்லா அபிவிருத்தி திட்டங்களும் சீனாவினைப் பொறுத்த வரையில் பல்வேறு தந்திரோபாய நோக்கங்களைக் கொண்டதாகும். இங்கு உருவாக்கப்படும் ஆழ்கடல் துறைமுகமானது சீனாவின் வர்த்தக் கப்பல்கள், கொள்கலன் கப்பல்கள், எண்ணெய், எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் செயற்படும் அணு சக்தியிலான நீர் மூழ்கிக் கப்பல்கள் உட்பட்ட எல்லா இராணுவ கப்பல்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

அம்பாந்தோட்டை அபிவிருத்திவலயம் சீனாவிற்கு விண்வெளியினை மேற்பார்வையிடுவதற்கான தந்திரோபாய மையமாகவும் செயற்பட முடியும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் யுத்த விமானங்கள், ஏவுகணைகள் என்பவற்றிலிருந்து கப்பல்களைப் பாதுகாப்பதற்கான மையமாகவும் செயற்பட முடியும். சீனாவின் மீன்பிடிக் கப்பல்களை பாதுகாத்தல், புலனாய்வு கடமைகளைச் செய்தல் போன்றவற்றிற்கான தயார் நிலையினை அம்பாந்தோட்டையிலிருந்து மேற்கொள்ள முடியும்.

இலத்திரனியல் முறைமையை சீனாவினால் உருவாக்க முடியும். இவ் இலத்திரனியல் வலைப்பின்னல் முறைமையினூடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ, சிவில் போக்குவரத்தினை மேற்பார்வையிட முடியும். மேலும் டிக்கோகாசியாவினுள் ஐக்கிய அமெரிக்காவின் இராணுவத் தளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் செய்திப் பரிமாற்றங்களையும், இந்தியாவின் அணுசக்தி வல்லமையினையும் மேற்பார்வை செய்ய முடியும்.

இதனையிட்டு இந்தியா மிகவும் கவலை கொள்வதாக அடிக்கடி அறிவித்து வருகின்றதாயினும் இதிலிருந்து மீள்வதற்கு இயலாதநிலையிலேயே உள்ளது. சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்து இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைக் கொள்கை வகுப்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டே வந்துள்ளார்கள் என்ற உண்மையினை மறுக்க முடியாது.

 

Share

Who's Online

We have 302 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.