Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...

Civil Society

Civil Society

Civil Society by Thanabalasingham Krishnamohan

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan

  • இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    Sunday, 28 December 2014 17:17
  • Civil Society

    Civil Society

    Tuesday, 15 October 2013 23:18
  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    Tuesday, 15 October 2013 23:36
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...

Around the World

  • US official urges 'cautious approach' after Trump baselessly claimed taking Tylenol is linked autism in children.

    Read more...
  • UN secretary-general strongly condemns Israeli attacks in Gaza on Tuesday, which killed more than 100 Palestinians.

    Read more...
  • The US president has struck a number of deals in his tour of Asia this week.

    Read more...
  • Tensions between China and the US have escalated amid Donald Trump's tariff threats and new restrictions on exports.

    Read more...
  • As the mayoral election nears, Mamdani is showing what it takes to maintain a lead with the Jewish population in NYC.

    Read more...
  • From tariffs to TikTok, rare-earth metals to fentanyl, a packed agenda awaits the leaders of the US and China.

    Read more...
  • Entry to Lithuania still allowed for certain travellers, including EU citizens and humanitarian visa-holders.

    Read more...
  • Doctors Without Borders says it was told to leave by November 9 and that it hopes to find 'positive solution' soon.

    Read more...
  • The Ta’ang National Liberation Army says it will pull out of the ruby-mining town of Mogok and nearby Momeik.

    Read more...
  • The suspects face charges for theft committed by an organised gang and criminal conspiracy, prosecutor says.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.04.06, 2013.04.07 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

 

clip_image002 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ஆம் திகதி ஜேனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரில் இணை அனுசரணை நாடுகளாகிய அஸ்த்திரியா, கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், இத்தாலி, நோர்வே, பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டாவது தடவையும் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணையினைச் (A/HRC/22/L.l/REV.1) சமர்பித்து நிறைவேற்றிக் கொண்டது. இலங்கைக்கு எதிரான பிரேரணையில் சில திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா முயற்சித்தாலும், ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய நட்பு நாடுகளால் இந்தியாவின் இம்முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக இருபத்தைந்து நாடுகளும். எதிராக பதின்மூன்று நாடுகளும் வாக்களித்ததுடன், எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆதரவாக அதிக வாக்குகள் கிடைக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டதுடன். இது ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுமிருந்தது.

சாராம்சம்

2013 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுத் தீர்மானம் மிகவும் கடுமையான தொனியில், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொறுப்புக்கூறுவதுடன், யுத்தக்களத்தில் நடந்த மனிதப்படுகொலைகளுக்கு நம்பத்தகுந்ததும், நடுநிலையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இத்தீர்மானம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

மேலும், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் சிபார்சுகளையும் இத்தீர்மானம் அங்கீகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நிகழவிருக்கும் கூட்டத்தொடரின் போது இது தொடர்பான முன்னேற்றத்தினை இலங்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கருத்து

இலங்கையில் வாழும் எல்லா மக்களதும் நற்பேறு, உறுதியான சமாதானம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சர்வதேச சமுதாயம் அர்ப்பணிப்புடன் பணியாற்ற தயாராகவுள்ளது என்று செய்தி தெளிவாக இவ்வாக்களிப்பின் மூலம் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது ஐக்கிய அமெரிக்காவின் கருத்தாக இருந்தது. இதனை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச்சபை ( National Security Council) பேச்சாளர் கைற்லின் ஹைடன் ( Caitlin Hayden) தெளிவுபடுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது இலங்கையில் மீண்டும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என்றும், இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் குணப்படுத்த முடியாமலிருந்த இனமோதலைக் குணப்படுத்த உதவும் என்றும், இலங்கையில் மீறப்பட்ட சர்வதேசச் சட்டம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம் என்பவற்றிற்கு நம்பத்தகுந்த விசாரணைகள் நடந்துவதை இத்தீர்மானம் ஆர்வப்படுத்தும் என்றும் ஐக்கிய அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் நியாயங்கள்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கைப் பிரதிநிதி ஐக்கிய அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை இலங்கையினால் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். இலங்கை மேற்கொள்ளும் நல்லிணக்கச் செயற்பாட்டினை இது இல்லாதொழித்து விடும் எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.

நவநீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக கூறப்பட்டுள்ள விடயங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயங்களைக் கொண்டவைகளல்ல என்பது இலங்கையின் கருத்தாகவும் இருந்தது. அதேநேரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இதுவரை நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வெற்றி கொள்வதற்கு இலங்கை கையாண்ட தந்திரோபாயச் செயற்பாடுகளும் தோல்வியடைந்திருந்தன.

2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சீனாவும், ரஸ்யாவும் வழங்கிய ஆதரவிற்கும் மத்தியில் இலங்கை பாரிய தோல்வியைத் தழுவியிருந்தது. இப்பாடத்தில் இருந்து இலங்கை விடயங்களைக் கற்றுக் கொண்டு இவ்வருடம் இதிலிருந்து மீளுவதற்கு முயற்சித்திருக்க வேண்டும். இவ்வாறு முயற்சிக்காது விட்டமை இராஜதந்திர ரீதியில் இலங்கை தோல்வியடைவதற்குக் காரணமாகிவிட்டது.

இந்தியாவின் நிலை

2013 ஆம்; ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் ராஜ்ஜ சபையில் இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாகவும், அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரனை தொடர்பாகவும் இந்தியா பின்பற்றவுள்ள கொள்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இவ் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் ( Salman Khurshid) 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிசக் கட்சி ஆகியன இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், இலங்கை இறைமையுடைய நாடு என்ற வகையில் அதன் உள்விவகாரத்தில் நேரடியாக இந்தியா ஓரு போதும் தலையீடு செய்ய மாட்டாது. இலங்கையின் இன மோதலுடன் தொடர்புபட்டு இந்தியா நிறையவே துன்பப்பட்டு விட்டது. எதிர்காலத்தில் இவ்வாறு துன்பப்படவும் தனது நட்பு நாடு ஒன்றினைத் தண்டிக்கவும் இந்தியா விரும்பவில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

சல்மன் குர்ஷிட் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையினால் மனஆறுதலுடனும், தைரியத்துடனும் இலங்கை இருந்தது. ஆயினும்; இந்தியப்; பிரதமர் மன்மோகன் சிங் 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 6ஆம் திகதி பாராளுமன்றத்தின் கீழ்சபையில் நிகழ்த்திய உரையில் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக இலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்க்கும் செயற்பாடுகளை பின்வருமாறு கோடிட்டுக் காட்டியிருந்தார்

  • இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்பவற்றில்; மிகவும் உறுதியான செயற்பாட்டினை இந்தியா எதிர்பார்க்கிறது
  • பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தத்தினை அமுல்;படுத்துவதுடன் அர்த்தமுள்ள அரசியல் தீர்வினை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.
  • வட மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துதல் வேண்டும்
  • கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையையும், செயற்திட்டத்தினையும் உருவாக்க வேண்டும்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் உரை இலங்கைக்கு பெரும் திகைப்பினை கொடுத்திருந்தது.இலங்கையில் நல்லிணக்கத்தையும், அரசியல் தீர்வினையும் அடைவதற்குத் தேவையான முன்நகர்வினை எந்தளவில் இலங்கை மேற்கொள்கின்றது என்பதனையும், இதிலிருந்து இலங்கை விலகுமாக இருந்தால் இலங்கையினை மனித உரிமைகள் பேரவையில் கையாளுவதற்கான புறச்சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் இந்தியா சிந்திக்கத் தொடங்கி விட்டது என்பதையும் மன்மோகன் சிங்கின் உரை தெளிவுபடுத்தியிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மத்தியரசில் கூட்டுச் சேர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழகத்தில் அதிகாரத்திலிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய கம்யூனிசக் கட்சி என்பவற்றுடன் ஏனைய தமிழகக் கட்சிகளும் இந்தியாவின் தேசியக் கட்சிகளாகிய குறிப்பாக பாரதிய ஜனதாக்கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சி ஆகியவற்றின் அங்கத்தவர்களும் சனல் 4 காணொளி இறுதியாக வெளியிட்டிருந்த பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான ஆவணங்களினால் பாதிப்படைந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர்.

இதனால் பெரும் நெருக்கடி நிலை ஒன்றை மத்திய அரசாங்கம் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகக் காட்டத் தொடங்கியதுடன், மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை இலக்குகளுக்கு அப்பால் சென்று மத்திய அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் காட்டிக்கொண்டது. இதன்மூலம் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா எடுக்கப்போகும் கொள்கைக்கு நியாயம் தேடிக் கொண்டது. எனவே யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதனூடாகத் தேசியளவில் தனக்கு ஏற்பட்டிருந்த அரசியல் அழுத்தத்தினை வெற்றி கொண்டதாகக் காட்டிக் கொண்டது.

எனவே 2013 ஆம் ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் வெளியிட்ட கருத்திற்கு எதிரான செயற்பாட்டினை இந்தியா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொண்டது எனக் கூறலாம். இந்திய பிரதிநிதி டிலிப் சின்ஹா ( Dilip Sinha) இத்தீர்மானம் தொடர்பான விவாதம் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற போது 'பொறுப்புக்கூறுதலையும் இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் இலங்கை உத்தரவாதப்படுத்த வேண்டும். இவைகள் யாவும் சர்வதேச சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். வெகுசன தொடர்பு சாதனங்களுக்கு சின்ஹா வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்திக் கூறியிருந்தார்.

யதார்த்தம்

உண்மையில் இந்தியாவின் ஆதரவுடனேயே உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்தது. 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கையில் உள்நாட்டு யுத்தமும் இறுதிநிலையினை அடைந்திருந்தது. இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்கட்சி தலைமையிலான கூட்டு அரசாங்கம் தமிழகத்தின் அழுத்தத்தின் மத்தியில் தேர்தலில் வெற்றி பெறுவதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதிலும் தீவிரமாக இருந்தது. ஏககாலத்தில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக யூகோஸ்லேவியா கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக அங்கத்துவ நாடுகளிடையே இந்தியா பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன், அதற்கு எதிராக வாக்களித்து இப்பிரேரணையினைத் தோல்வியடையச் செய்தது. இதன்பின்னர் இந்தியாவின் ஆதரவில்லாமல் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு யுத்தக் குற்றப் பிரேரணைகளையும் இலங்கையினால் தோற்கடிக்க முடியவில்லை. அனேக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் தென்னாசியப் பிராந்திய வல்லரசாகிய இந்தியாவினை அச்சாகக் கொண்டு அசைகின்றன என்ற சர்வதேச அரசியல் யதார்த்தத்தினை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகின்றது. இந்தியாவினை தந்திரோபாய ரீதியல் வெற்றி கொள்வனூடாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கப் பிராந்திய நாடுகளை தம்வசப்படுத்தலாம் என்ற ஐக்கிய அமெரிக்காவின் கணிப்பு இங்கு வெற்றியளித்துள்ளது.

எனவே 2012 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த இலங்கை இந்தியாவிற்கு இது தொடர்பாக எதிர்காலத்தில் இருக்க கூடிய இடர்பாடுகளை மீள்பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும். மறுபக்கத்தில் 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள இந்திய அரசாங்கம் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களால் தேசிய மட்டத்தில் தனக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களைக் கருத்தில் எடுத்தே செயற்படும் என்ற உண்மையினை இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாது விட்டமை எல்லா இராஜதந்திரத் தோல்விகளுக்கும் காரணமாகிவிட்டது.

 

Share

Who's Online

We have 350 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

        

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.