Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan

  • தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    Tuesday, 15 October 2013 23:38
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party Mediation

    Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...

    Tuesday, 15 October 2013 23:29
  • State Institution- A View of Executive Branch

    State Institution- A View of Executive Branch

    Tuesday, 15 October 2013 23:34
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...

Around the World

  • Labor Party leader becomes the first Australian prime minister to win second consecutive three-year term in two decades.

    Read more...
  • Ukrainian president says he and Trump agree that a 30-day ceasefire is the correct first step towards ending the war.

    Read more...
  • Ryan Garcia returns from a doping suspension to beat Rolly Romero with a unanimous points decision in New York.

    Read more...
  • Ten years ago, I watched the residents of Lesbos welcome refugees. Now the public narrative says this was a mistake.

    Read more...
  • An attack in Kashmir challenges Modi’s ‘normalcy’ narrative.

    Read more...
  • Pakistan test-fires surface-to-surface missile amid fears of military escalation with India over deadly Kashmir attack.

    Read more...
  • It's the country's second poll in less than a year after a previous election was anulled.

    Read more...
  • Snap election was triggered by removal of Yoon Suk-yeol from the presidency for declaring martial law on December 3.

    Read more...
  • Fred VanVleet scored 29 points as the Houston Rockets produce stunning 115-107 victory over the Golden State Warriors.

    Read more...
  • For three decades, Abdallah Ali Sherif has been on a mission to explore Harar's once-repressed cultural identity.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.11.24 , 2012.11.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002

ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு 2011 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனச் செயலாளரிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளித்த அறிக்கை யுத்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகத் தனியானதொரு விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் சிபார்சு செய்திருந்தது. இதற்கிணங்க சார்ள்ஸ் பெட்றி (Chaelrs Petrie) தலைமையில் மேலும் மூன்று பேர் கொண்ட புதியதோர் நிபுணர்கள் குழுவினை பான் கீ மூன் (Ban Ki Moon) நியமனம் செய்திருந்தார். இரண்டாவது நிபுணர்குழு 2012ஆம் ஆண்டு சித்திரை மாதம் தமது பணியைத் தொடங்கி 2012ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தமது அறிக்கையினை பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தது. இக்குழுவின் நோக்கம் மோதல் நிகழ்ந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் வகிபங்கு தொடர்பாக ஆராய்வதாக இருந்ததுடன் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை கூறுவதுமாகும். இவ் அறிக்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக அறிக்கை என அழைக்கப்படுகிறது.

நிபுணர்குழு அறிக்கை

ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனச் செயலாளரிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளித்த அதேதினம் இதன் பிரதியொன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கம் இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களுக்குப் பொறுப்பேற்க மறுத்துவிட்டது. இவ்வறிக்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது “வெளிப்படைத்தன்மை, பொறுப்பு என்பவற்றின் அடிப்படையில் இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அங்கத்துவ நாடுகள் இதனை மிகவும் அவதானமாக வாசிக்க வேண்டும்” எனக் கேட்டிருந்தார். இவரின் இக்கருத்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு இவ்விடயம் தொடர்பாக மேலும் எதனையும் செய்ய முடியாது என்பதை மறைமுகமாகக் கூறுவதாகவுள்ளது.

மனிதவுரிமைகள் விழிப்பு (Human Rights Watch) பான் கீ மூனின் இக்கருத்தினை எதிர்த்தது. தருஸ்மன் குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் யுத்தக் குற்றங்களைச் சர்வதேசப் பிரச்சினையாக்குவதற்குரிய அதிகாரம் குறைந்தவராகப் பொதுச் செயலாளர் இருக்கின்றார் என்ற கருத்தினை மனிதவுரிமைகள் விழிப்பு கொண்டிருந்தது.

ஐக்கியநாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட தகவல்களின் படி 10,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிக்கலாம் எனவும், பின்னர் வெளிவந்த ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழு வெளியிட்ட தகவல்களின் படி 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. சிலர் இவ் எண்ணிக்கை இதனையும்விட அதிகமானது எனக் கூறுகின்றார்கள். ஆயினும் 40,000 வரையிலான பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என பலர் வாதிடுகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் பொதுமக்கள் மரணம் தொடர்பான ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய புள்ளிவிபரங்கள் திரட்டப்படவில்லை என்பது துரதிஸ்டவசமானது. இதன் உண்மைத் தன்மையினைக் கண்டறிவதற்குச் சுதந்திரமான புலனாய்வு உடனடியாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மேலும் ஏறக்குறைய 300,000 மக்கள் உணவு, வைத்திய வசதி போன்றவைகளின்றி அவஸ்த்தைப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமைகள் குழு மற்றும் மக்களுடன் இணைந்து தருஸ்மன் அறிக்கை தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என மனிதவுரிமைகள் விழிப்பு கோரியது. உண்மைகள் எதுவாக இருப்பினும் லிபியாவிற்குள் நேட்டோ படைகள் நுழைந்ததைப் பாதுகாப்புச் சபை உறுதிப்படுத்த இணங்கியது போல் இலங்கையின் உள்விவகாரத்திற்குள் பான் கீ மூன் நுழைவதைப் பாதுகாப்பு சபையிலுள்ள சீனாவும், ரஸ்சியாவும் மிகவும் வெளிப்படையாக எதிர்த்தன.

யுத்தம் யாருக்கு எதிராக இருப்பினும் யுத்தவிதிகள், பொதுமக்களின் பெறுமதிமிக்க உயிர்கள் பாதுகாக்கப் படல் வேண்டும். இவைகளை மீறுபவர்கள் மீது குறைந்தபட்சம் மனிதஉரிமைகள் சபையாவது விசாரணை செய்யவேண்டும். இதனால் தருஸ்மன் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அதிக கவனம் எடுத்திருந்ததுடன் இவ் அறிக்கை தொடர்பாக “இலங்கை அரசாங்கம் நேர்மையான விசாரணை மூலம் தனக்கிருக்கக்கூடிய பொறுப்பினை வெளிப்படுத்த வேண்டும். வன்முறை தொடர்பான குற்றச் சாட்டுகளுக்குப் பதில் கூறும் பொறுப்பினை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும். எல்லா அங்கத்துவ நாடுகளுக்கும் இவ் அறிக்கையினைப் பெறுவதற்கு உரிமையுள்ளது. எல்லா அங்கத்துவ நாடுகளும் இவ் அறிக்கை தொடர்பாகப் பொருத்தமான தீர்மானங்களை வரைவதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் உரிமையுள்ளனவாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நிபுணர்குழுவின் அறிக்கையினை மிகவும் கவனத்துடன் மீளாய்வு செய்த பின்னர், “இறுதி யுத்த காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான முடிவுகள், சிபார்சுகளையும், குறிப்பாக இரு தரப்பினரதும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்” என்பதையும் பொதுச் செயலாளர் ஏற்றுக் கொண்டிருந்தார்.

உள்ளக அறிக்கை 2012

2008ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் யுத்தப் பிரதேசத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகளை வெளியேற்றுவது என பான் கீ மூன் எடுத்த தீர்மானத்தினை உள்ளக அறிக்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகள் யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய பின்னரே பொதுமக்களுடைய பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த முடியாது போனது எனக் கூறுகின்றது.

சார்ள்ஸ் பெட்றி கையளித்துள்ள உள்ளக அறிக்கை “கடும் வெறுப்புடன் மனிதப் பேரழிவு வன்னியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது கொழும்பிலிருந்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபன ஊழியர்கள் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதில் எவ்வித கவனமும் எடுக்காது பொறுப்பற்றிருந்தனர். ஐக்கிய நாடுகள் ஸ்தாபன தலைமைச் செயலகமும் இவர்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்காதிருந்தது. இங்கு மக்களைப்பாதுகாத்து இவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருக்க வேண்டிய ஸ்தாபனம் மனத்தயக்கத்துடன் அதில் விருப்பமின்றி இருந்துள்ளது” எனச் சாடியுள்ளது. மனிதாபிமானத்துடனும், பொறுப்புணர்வுடனும் மிகவும் உயர்நிலையில் பொதுமக்களைப் பாதுகாத்திருக்க வேண்டிய ஸ்தாபனம் இதிலிருந்து தவறியமை மூலம் முழு அமைப்பையும் பலவீனப்படுத்தித் தோற்கடித்துள்ளது.

யுத்தப் பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த பென்ஜமின் டிக்ஸ் (Benjamin Dix) யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதை தான் விரும்பியிருக்கவில்லை எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக இவர் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் பின்வருமாறு விபரிக்கின்றார் “நான் நம்புகின்றேன் வடக்கு நோக்கியே மேலும் நாம் நகர்ந்திருக்க வேண்டும். தெற்கு நோக்கி நகர்ந்திருக்க கூடாது. அடிப்படையில் எவ்வித பாதுகாப்போ அல்லது சாட்சியோ இல்லாமல் மக்களை நாம் கைவிட்டு விட்டோம். இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்கள் யுத்தப் பிரதேசத்தில் இருந்தனர். இவர்களை இருதரப்பினரும் தமது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இம்மக்களை பலாத்காரமாக தமது படையணியில் சேர்த்தனர் அல்லது மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் அல்லது அரசாங்கப் படைகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்திற்குள்ளாகி இவர்கள் இறந்து போயினர்”.

ஐக்கியநாடுகள் ஸ்தாபன உத்தயோகத்தர்கள் யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறியமை தொடர்பாக தனது பெயரைக் கூறிப்பிட விரும்பாத பிரித்தானியாவில் தற்போது அகதி அந்தஸ்த்துக் கோரி வசித்து வரும் தமிழ் ஆசிரியர் ஒருவர் பின்வருமாறு கூறியிருந்தார். “யுத்தப் பிரதேசத்தினை விட்டு வெளியேற வேண்டாம் என நாங்கள் அவர்களை கேஞ்சினோம், மன்றாடினோம். அவர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்கவேயில்லை. நாங்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் அங்கு தங்கியிருந்தால் அனேகமான மக்கள் இன்று உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்”.

யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு பொறுப்பாகவிருந்த ஜோன் ஹோல்ம்ஸ் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இயலாமை தொடர்பாக பின்வருமாறு கேள்வியெழுப்புகின்றார். “யுத்தத்தின் போது ஏற்பட்ட உண்மையான இழப்புக்களை வெளியிட்டிருந்தால் கூட யுத்தத்தினை நிறுத்தியிருக்க முடியாது. பொதுமக்களைப் பாதுகாப்பதை விட புலிகளை அழிப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியது. இந்நிலையில் யுத்தத்தினை நிறுத்துவது சாத்தியமாக இருக்கவில்லை. சிறிய நாடு ஒன்றின் உள்நாட்டு யுத்தத்தினை நிறுத்துவதற்குக் கூட பலமற்றிருக்கும் நிறுவனமாகவுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் எவ்வாறு உலக அமைதியை ஏற்படுத்த முடியும்”.

இந்தியராகிய விஜய் நம்பியார்

இலங்கையின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தினை முடிவுக்கு கொண்டவருவதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சார்பில் பான் கீ மூனிற்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்தியராகிய விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டிருந்தார். 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் விஜய் நம்பியார் வெள்ளைக் கொடியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்திடம் சரணடையுமாறும், இவர்களுக்கான பாதுகாப்பு இலங்கை இராணுவத்தினால் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தினை வழங்கியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைவதை நேரில் பார்வையிடுவதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனப் பொதுச் செயலாளரின் பிரதிநிதியாகவும் விஜய் நம்பியார் கொழும்பு வந்திருந்தார். கொழும்பிலிருந்த விஜய் நம்பியாரின் வார்த்தைகளை நம்பி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் அவ்விடத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இது தொடர்பாக விஜய் நம்பியார் இன்றுவரை எக்கருத்தினையும் தெரிவிக்கவில்லை. இக்காலப்பகுதியில் விஜய் நம்பியாரின் சகோதரர் சரிஸ் நம்பியார் இலங்கை இராணுவத்தின் ஆலோசகராக கடமையாற்றி வந்துள்ளார். இது இப்படுகொலைகளுடன் விஜய் நம்பியார் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தினை மேலும் வலுப்படுத்தியிருந்தது.

இதற்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பும், ஈழத் தமிழர்களின் சுவிஸ் பேரவையும் வழக்குத் தாக்கல் செய்திருந்தன. இதில் விஜய் நம்பியார் இது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியராகிய நம்பியார் மீதான விசாரணைக்கான அழைப்பினை பான் கீ மூன் நிராகரித்திருந்தார் என்பதுடன் அவரைப் பாதுகாத்தும் இருந்தார்.

விஜய் நம்பியார் தொடர்பான விடயங்களை பான் கீ மூன் ஏன் மறைத்தார்? அதன் உள்நோக்கம் என்ன? எனப் பல கேள்விகள் எழுவதற்கு பான் கீ மூன் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பூரணமாக அழித்து யுத்ததினை முடிவிற்கு கொண்டுவர விரும்பிய இந்தியா தலைமையிலான சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உள்ளாக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ஊகிக்க வேண்டியுள்ளது. இலங்கையில் சர்வதேச மனிதாபிமானச்சட்டம் முறையாக மீறப்படுவதை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பிரதிநிதியாக இருந்த இந்தியராகிய நம்பியார் நேரடியாகவே பார்வையிட்டிருந்தார். இதன் மூலம் சர்வதேச நாடுகளும் இவருக்கூடாகப் பார்வையிட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது.

இதனை முன்னைநாள் ஐக்கிய நாடுகள் சபைப் பேச்சாளராகக் கடமையாற்றிய கோர்டன் வைஸ் (Gordon Weiss) பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிங்கள சேவையாகிய சந்தேசியாவுக்கு (Sandeshaya) வழங்கிய செவ்வியொன்றில் கோடிட்டுக்காட்டுவதை அவதானிக்க முடிகின்றது. இச்செவ்வியல் இவர் “பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா சீனா, இந்தியா,பாக்கிஸ்தான், இஸ்ரவேல் போன்ற சில நாடுகள் இலங்கைக்கு இராணுவ உதவியை வழங்கியுள்ளன. 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் தமிழ் புலிகளைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் பொழுது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது அனேக நாடுகளுக்கு நன்கு தெரியும். தொடர்ச்சியாக வழங்கப்படும் ஆயுத விநியோகத்தினால் இறுதி யுத்தம் எங்கு போய் முடியும் என சர்வதேச நாடுகளுக்குத் தெரியுமாக இருந்தால், நான் எண்ணுகின்றேன் இறுதிக்கட்ட யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு ஆயுத உதவி வழங்கிய சகல அரசாங்கங்களையும் விசாரணைக்குட்படுத்துவது பயன்மிக்கதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

யார் குற்றவாளிகள்

மொத்ததில் இந்தியா தலைமையில் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினை செயற்பாடற்றதாக்கி பாரிய மனிதப் படுகொலைகளை வன்னி மண்ணில் நிகழ்த்தியுள்ளன. தவறுகளுக்கு உடந்தையாக இருந்து விட்டு பான் கீ மூன் “தவறுகளை ஏற்றுக் கொள்வதாகவும் தவறுகளிலிருந்து பாடம் கற்று எதிர்காலத்திற்கு தம்மால் வழிகாட்டமுடியும்” எனக் கூறியுள்ளார். அவ்வாறாயின் பான் கீ மூன் பாடம் கற்பதற்காகவா 40,000 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்? ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கக் கால்களை அகலாமாகவும், ஆழமாகவும் பதித்ததில் 40,000 தமிழ் பொதுமக்கள் நசியுண்டு மரணித்து விட்டார்கள். இனி யாரிடமும் இவர்கள் நீதி கேட்க முடியாது. ஏனெனில் நீதி வழங்கும் என எதிர்பார்த்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இப்படுகொலைகள் நிகழத் துணை நின்றுள்ளது என்பது மரணித்துப் போன மக்களுக்கு இனித் தெரியப் போவதில்லை. இப்போதுள்ள கேள்வி யார் குற்றவாளிக் கூண்டில் நிற்பது? அவர்களை யார் விசாரிப்பது? என்பது மட்டுமேயாகும்.

 

Share

Who's Online

We have 385 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.