Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch

State Institution- A View of Executive Branch by Thanabalasingham Krishnamohan

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

  • தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு

    Tuesday, 15 October 2013 23:38
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • State Institution- A View of Executive Branch

    State Institution- A View of Executive Branch

    Tuesday, 15 October 2013 23:34
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...

Around the World

  • Han Duck-soo declares candidacy in June 3 election to replace impeached ex-president Yoon Suk-yeol.

    Read more...
  • An aid ship heading to Gaza has sent out a distress signal after crew members say it was hit in a drone attack.

    Read more...
  • US President Donald Trump overseeing 'troubling deterioration' in press freedom in US, Reporters Without Borders says.

    Read more...
  • Israel has ramped up attacks on Syria following a week of sectarian violence against the Druze community.

    Read more...
  • The roots of this decades-long conflict between India and Pakistan go back to the turbulent partition of 1947.

    Read more...
  • Social media campaign depicts fictional scenes of officials becoming disillusioned with ruling Chinese Communist Party.

    Read more...
  • These are the key events on day 1,163 of Russia’s war on Ukraine.

    Read more...
  • Ministry of Commerce says 'door is open' to talks, but it is willing to 'fight to the end' otherwise.

    Read more...
  • Lawyers say the Trump administration's efforts to deport Badar Khan Suri violate his freedom of speech and association.

    Read more...
  • Syrian Druze leader condemns 'genocidal campaign' after dozens killed in clashes south of Damascus.

    Read more...
தன்னைத்தானே விமர்சனம் செய்வதன் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது ஐ.நா - 0.0 out of 5 based on 1 vote
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.50 (1 Vote)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.01 , 2012.12.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001 வரலாற்று ரீதியில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தோல்வியடைந்து வந்துள்ளது. 1994ஆம் ஆண்டு ருவென்டா இனப்படுகொலை, 1995ஆம் ஆண்டு யுகோஸ்லேவியாவில் சேர்பேனிக்கா மற்றும் பொஸ்னியாவில் இஸ்லாமிய இளைஞர், யுவதிகள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டமை போன்றவற்றைத் தடுக்கமுடியாமல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் திணறியுள்ளது. இந் நாடுகளில் படுகொலைகள் நிகழ்ந்த போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அமைதிகாக்கும் படைகள் நிலை கொண்டிருந்தன. இந்நாடுகளின் முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவைகளைப் பாதுகாப்பதையே தமது பணியாக அமைதிகாக்கும் படை செயற்பட்டிருந்தது. பதிலாக நசிவடைந்து ஒடுக்குமுறைக்குள்ளாகிக் கொண்டிருந்த மக்களை இப்படைகள் பாதுகாத்திருக்கவில்லை. இதற்கு வரலாற்றிலிருந்து இதனைவிட பல சம்பங்களை ஆதாரமாகக் காட்டமுடியும்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், வறுமையினைத் தணித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல், உலகில் சமாதானத்தினைப் பேணுதல் போன்ற பல விடயங்களை செய்து வருவதாகக் கூறுகின்றது. ஆனால் யுத்தத்தினைத் தடுத்தல், மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல் போன்ற விடயங்களில் தோல்வினை சந்தித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாமையால் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறப்பதுடன் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இவைகளைத் தடுக்க முடியாத நிலையிலேயே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று உள்ளது.

படுகொலைகள்

2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிக்கலாம் என முதல் தடவையாகக் கூறியது. இதன் பின்னர் மிகுந்த தயக்கத்துடன் குறிப்பிடத்தக்களவு மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிபுணர் குழுவிலிருந்த ஒருவராகிய யஸ்மின் சூக்கா (Yasmin Sooka) 2012ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் திகதி லண்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் “40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிக்கலாம் என்பது குறைந்த மதிப்பீடாகும். உண்மையில் இது 75,000 மேற்பட்டதாகும்”. எனத் தெரிவித்துள்ளார்.

மன்னார் கத்தோலிக்க ஆயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசேப் (Rayappu Joseph) அடிகளார் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சியத்தில் வன்னிப்பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு ஐப்பசியில் 429,059 பொதுமக்கள் வாழ்ந்ததாக வன்னிப் பிரதேச அரசாங்க அதிபர்கள் வழங்கிய பதிவுகள் கூறுகின்றன. 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் படி 282,380 பொதுமக்களே யுத்தப் பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்துள்ளார்கள். இருதரப்பு அறிக்கைகளையும் ஒப்பு நோக்குகின்றபோது 146,679 பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. எனவே இது தொடர்பான விசாரணை நடாத்தப்படல் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இவரின் கருத்தினை பல ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இப்போது நம்புகின்றதுடன் ஏறக்குறைய 150,000 பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும் எனக் கூறுகின்றார்.

2009ஆம் ஆண்டு தை மாதம் 31ஆம் திகதி பல நாடுகளில் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் மக்கள் பான்-கீ மூன் “தமிழ் மக்களைப் பாதுகாருங்கள்” என்ற சுலோகத்தினைக் காவிக்கொண்டும் உரத்த குரலில் சத்தமிட்டு ஊர்வலம் நடத்தினர். லண்டனில் வசிக்கும் ஏறக்குறைய 90 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் தெருக்களில் இறங்கி ஊர்வலம் நடத்தியமை வரலாற்றில் நிகழ்ந்த முதல் சம்பவமாகும். ஆனால் தெருக்களில் இறங்கிய மக்கள் கொண்டு சென்ற சுலோக அட்டைகள், அழுத்திக் கேட்ட கோரிக்கைகள் அனைத்தையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் புறந்தள்ளிச் செயற்பட்டது.

பாசாங்கு

ஆனால் 2009ஆம் ஆண்டு தை மாதம் 30ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பில் “வடபகுதி யுத்தப் பிரதேசத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக” இலங்கை ஜனாதிபதி அறிவித்துக் கொண்டமையினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் வரவேற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தது.

2009ஆண்டு வைகாசி மாதம் 27ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானம் ஒன்றில் “பொதுமக்களுடைய விருப்பத்திற்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10,000 தமிழ் பொதுமக்களை இலங்கை அரசாங்கம் மீட்டெடுத்துக் கொண்டமை பாராட்டத் தக்கது” எனத் தெரிவித்திருந்தது. இதன் மூலம் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த பொதுமக்களுக்கு இழப்பில்லாத யுத்தம் (zero civilian causality war) மூலம் உலகில் முதற்தடவையாக யுத்தத்தில் பணையம் வைக்கப்பட்டிருந்த பாரியளவிலான பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஏற்றுக் கொண்டிருந்தது. இத்தருணத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் அல்லது குறிப்பிட்டளவு மக்கள் இறந்துள்ளார்கள் என்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை எதனையும் குறிப்பிடவில்லை. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி (Noam Chomsky) ஐக்கிய நாடுகள் சபையின் பாசாங்கு என்பது “தடம்காணமுடியாத ஆழமாக இருந்தது. இது மூச்சுத்திணற வைத்தது”. எனக் கூறுகின்றார்.

பொறுப்புக் கூறுதல்

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் விழிப்பு (Human Rights Watch) சர்வதேச Crisis Group போன்றவைகள் யுத்தக் குற்றங்கள் தொடர்பான முதனிலைப் பொறுப்புக்கூறலை இலங்கையிடம் வலியுறுத்தியிருந்தன. இவ் அமைப்புக்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவினையும் அது தயாரித்து வழங்கிய அறிக்கையினையும் நிராகரித்த இலங்கை அரசாங்கம், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகக் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவும் (Commission of Inquiry on Lessons and Reconciliation) என்ற பெயரில் ஆணைக்குழு ஒன்றினை நிறுவி இலங்கையில் நல்லிணக்கத்தினையும், தேசக்கட்டுமானத்தினையும் உருவாக்க இலங்கை மக்களிடம் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்பிக்கும் படி கேட்டிருந்தது. இவ் ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையினை 2011ஆம் ஆண்டு மார்கழி மாதம் அரசாங்கத்திடம் கையளித்தது.

2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிறைவேற்றிய பிறி தொரு தீர்மானத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவும் வழங்கிய சிபார்சுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இத்தீர்மானங்கள் யாவும் தோல்வியில் முடிவடைந்து விட்டதுடன் நிபுணர்குழு அறிக்கையும் சிறுபிள்ளைத்தனமான தொன்றாகவே இலங்கை அரசாங்கத்தால் பார்க்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஐக்கிய நாடுகள் சபையூடாக இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

மேற்குலக நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் தாம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்ற மனப்பதிவை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தந்திரமாக விமர்சகர்களால் இது பார்க்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்ட சிபார்சுகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், இலங்கையும் கைவிட்டு விட்டன. தற்போது உள்ளக அறிக்கை என்ற ஒன்றை வெளியிட்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தன்னைத்தானே விமர்சனம் செய்வதன் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது.

சுயவிமர்சனம்

இலங்கை அரசாங்கப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சுற்றி வளைத்து யுத்ததில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஐக்கிய நாடுகள் ஸ்தாபன ஊழியர்களை உடனடியாக வன்னியிலிருந்து வெளியேறும் படி இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டது. அரசாங்கத்தின் உத்தரவின் படி ஐக்கிய நாடுகள் ஸ்தாபன ஊழியர்கள் தொடர்ந்து வன்னியில் தங்கியிருந்தால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது. உலக வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவினை சந்தித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் கைவிட்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் எட்டு சர்வதேச ஊழியர்களம், பல உள்ளூர் ஊழியர்களும் வன்னியை விட்டு வெளியேறியிருந்தனர்.

இதனைப் பாதுகாப்புச் சபையின் வழமையான கூட்டத்தினைக் கூட்டும்படியோ, அல்லது மனித உரிமைகள் பேரவையினை கூட்டும்படியோ அல்லது இலங்கையின் மோதல் காலத்தின் இறுதிக் காலப்பகுதியில் பொதுச்சபையினைகூட்டும்படியோ ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அங்கத்துவ நாடுகள் கோரவில்லை என உள்ளக அறிக்கை விமர்சனம் செய்துள்ளது.

தவறுகளிலிருந்த பாடம் கற்போம், எமது பொறுப்பை பலப்படுத்துவோம், எதிர்காலத்திற்காக பயனுள்ள வகையிலும், அர்த்தத்துடனும் செயற்படுவோம், எமக்கிருந்த தடைகளை வெல்லுவதற்கு எல்லா வகையான மனித நேயத்துடனும் செயற்படுவது எமது கடமையாகும். பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவது முக்கியமானது என்பதை சிரியாவின் இன்றைய நிகழ்வுகள் ஞாபகப்படுத்துகின்றது. எதிர்கால தனது செயற்பாட்டிற்காக ஆலோசனை கூறுவதற்கும் நிபுணர்கள் குழுவின் சிபார்சுகளை கருத்தில் கொள்வதற்கும் சிரேஸ்ட மட்டத்திலான குழுவொன்றை தான் உருவாக்கப் போவதாக பான்-கீ-மூன் கூறியுள்ளார்.

ஆனால் முப்பது வருடகாலம் இலங்கையில் இடம்பெற்ற மோதலில் அப்பாவி மனிதஉயிர்களின் இழப்புத்தொடர்பாக இலங்கை தெளிவானதொரு பாடத்தைக் கற்றுள்ளது. இவ் அனுபவங்களை அடிப்படையாக வைத்து நெறியான சட்டவரைபை உருவாக்கி, இந்த மோதலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவது சர்வதேசச் சமூகத்தின் பொறுப்பாகும். அண்மையில் இஸ்ரவேல் - காசா மோதலின் பத்து பேர்கள் இறந்ததற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தனது பாதுகாப்பு சபையின் அவசரகால கூட்டத்தினைக் கூட்டி இத்தகராறு தொடர்பாக ஆராய்ந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தத்தில் கொலையுண்ட 40,000 பொதுமக்களுக்காக விசேட கூட்டத்தொடர்களையும் கூட்டவும் இல்லை ஆராயவும் இல்லை. இலங்கையில் யுத்தப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களுக்கான மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் வசதிகளைச் செய்யும் பொறுப்பினைக் கூட செய்வதிலிருந்து தவறிவிட்டது.

 

Share

Who's Online

We have 132 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.