Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு by Thanabalasingham Krishnamohan

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan

  • புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம்

    Tuesday, 15 October 2013 23:43
  • பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியச் சங்கம்

    Tuesday, 15 October 2013 23:07
  • மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    மாக்கியவல்லியின் இளவரசன் திறனாய்வு

    Tuesday, 15 October 2013 23:26
  • இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    Sunday, 28 December 2014 17:17
  • இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    Tuesday, 15 October 2013 23:36
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...

Around the World

  • Sednaya, the Assad regime’s flagship prison, became Syria’s slaughterhouse, where thousands were tortured and killed

    Read more...
  • Death of 21-year-old raises alarm as rights groups document systematic torture in detention facilities.

    Read more...
  • Former player Tatjana Haenni is named the new chief executive, making her the first female boss in the Bundesliga.

    Read more...
  • Tony Blair’s anticipated role quickly emerged as a source of deep concern for many stakeholders.

    Read more...
  • Hamas’ political leader outside Gaza, Khaled Meshaal, said that Palestinians must heal from Israel's genocide.

    Read more...
  • A Palestinian woman says Israeli soldiers used her as a human shield during a ground operation in Gaza.

    Read more...
  • Here's a closer look at what Trump said about the economy and migration during the Politico interview and the rally.

    Read more...
  • Ceremony is tinged with shadowy intrigue, as the Nobel institute earlier said Machado’s whereabouts were unknown.

    Read more...
  • Gracie Mansion’s significance grows as Zohran Mamdani, elected on a housing justice agenda, prepares to move in.

    Read more...
  • A severe winter storm is creating more hardship for Gaza’s forcibly displaced population.

    Read more...
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

தேர்தல் என்பது வாக்காளர்களின் விருப்பத் தெரிவின் அடிப்படையில் சட்டசபை பிரதிநிதிகளுக்கான ஆட்சேர்ப்பாகும். வாக்காளர்கள் தங்களின் வாக்குகளினால் சட்டசபை பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றார்கள். சுருக்கமாக கூறின் தேர்தல் என்பது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்தல் தொகுதியில் அல்லது மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவதை குறித்து நிற்கின்றது. நாட்டினை ஆளுகின்ற பிரதிநிதிகள் தேர்தல் ஊடாகவே தெரிவு செய்யப்படல் வேண்டும் என்பது ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படை வாதமாகும். எல்லா ஜனநாயக நாட்டிலும் சட்டசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி நிர்வாக உத்தியோகத்தர்கள் போன்ற அனைவரும் தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுகின்றார்கள். சில நாடுகளில் ஜனாதிபதி, உப ஜனாதிபதி, நீதிபதிகள் என்பவர்கள் கூட தேர்தல் மூலமே தெரிவு செய்யப்படுகிறார்கள். ஜனநாயக பாரம்பரியத்தில் தேர்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆகவே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலில் பங்குபற்றுவதற்கு உரித்துடையவர்களாகின்றனர். தேர்தல் ஒன்றில் வேட்பாளர்களுக்கு இடையில் ஆகக்கூடிய ஆதரவினை பெறுகின்றவர் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுகின்றார். இவர் மக்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்.

தேர்தலின் வகைகள்

பொதுவாக தேர்தல்கள் இரண்டு வடிவங்களை கொண்டதாக காணப்படுகின்றன. ஒன்று நேரடித் தேர்தல் மற்றையது மறைமுகத் தேர்தல் ஆகும்.

நேரடித் தேர்தல்

இவ்வகையான தேர்தலில் வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நேரடியாகவே தேர்தலில் பங்கு பற்றுகின்றார்கள். நேரடியாகத் தேர்தலில் பங்கு பற்றுவதற்காக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்குசமூகமளிக்கும்படி வேண்டப்படுவார்கள். நேரடித் தேர்தலில் வாக்காளர்கள் பெரும்பான்மை ஆதரவினால் தமது பிரதிநிதியை தெரிவு செய்து கொள்கின்றார்கள். நேரடியான தேர்தல் முறையானது முழுமையான ஜனநாயகப்பண்பினை கொண்டதாகும். ஒவ்வொரு ஜனநாயக நாட்டினதும் சட்டசபை பிரதிநிதிகள் அனைவரும் நேரடி தேர்தல் முறை மூலமாகவே தெரிவு செய்யப்படுகின்றார்கள். உதாரணமாக பிரித்தானிய பொது மக்கள் சபை, ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை, இந்தியாவின் பொதுமக்கள் சபை ( Lokh Sabha ) போன்றவற்றை குறிப்பிடலாம். நேரடித்; தேர்தல் முறைமையின் கீழ் வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேரடியான தொடர்பு காணப்படும். இதனால் பிரதிநிதிகள் வாக்காளர்களின் பொது விவகாரங்களில் ஆர்வமும் கூர்மையான அவதானமும் கொண்டவர்களாக காணப்படுவர். மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு பொது விவகாரங்களில் ஆர்வமும் எழுச்சியும் ஏற்படுகின்றது. வாக்காளர்கள் அரசு எதிர்நோக்கும்அரசியல் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கும் மக்கள் இறைமையின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதற்கும் நேரடித் தேர்தல் வாய்ப்பானது எனக் கூறப்படுகின்றது.

ஆயினும் நேரடித் தேர்தல் முறைமையில் கல்வியறிவு அற்ற வாக்காளர்கள் பிரச்சாரத்தின் வழி உணர்ச்சி வசப்படுத்தப்பட்டு தவறாக வழி நடாத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இதனால் தவறான கொள்கைகள் சித்தாந்தங்களை கொண்டவர்கள் பிரதிநிதிகளாவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் சாதி, மதம், பிரதேசம், இனம், பணச் செல்வாக்கு போன்ற பண்புகள் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

மறைமுகத் தேர்தல்

இவ்வகையான தேர்தலில் வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நேரடியாக தேர்தலில் பங்கு பற்றுவதில்லை. பதிலாக மறைமுகமாகவே பங்குபற்றுகின்றார்கள். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதி, உபஜனாதிபதி ஆகியோரை தெரிவு செய்வதற்கு மறைமுகத் தேர்தலே பயன்படுத்தப்படுகின்றது. இங்கு மக்கள் தேர்தல் கல்லூரி ( Electoral Collage ) அங்கத்தவர்களை தெரிவு செய்வார்கள். தேர்தல் கல்லூரி அங்கத்தவர்களே ஜனாதிபதி, உபஜனாதிபதி ஆகிய இருவரையும் தெரிவு செய்கின்றார்கள். இதே போல இந்திய ஜனாதிபதியை மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்கின்றார்கள். அதாவது மக்கள் சட்டசபை உறுப்பினர்களை தெரிவு செய்ய சட்டசபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்கின்றார்கள்.

இங்கு மறைமுகத் தேர்தலானது இரண்டு வகையான பண்புகளை வெளிப்படுத்துகின்றது. ஒன்று மக்கள் தங்கள் பிரதிநிதிகளை நேரடியாக தெரிவு செய்கின்றார்கள். மற்றையது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெரிவு செய்கின்றார்கள். மறைமுகத் தேர்தலில் பங்குபற்றுகின்ற வாக்காளர்கள் பொதுவாக கல்வியறிவு கொண்டவர்களாகவே காணப்படுவார்கள். இதனால் இவர்களின் வாக்குகள் எப்போதும் சுய மதிப்பீட்டின் அடிப்படையிலானதாகவே காணப்படும். பிரச்சாரத்திற்கு மதிப்பளிப்பதாக இருக்க மாட்டாது. அரசியல் விழிப்புணர்வும் புத்திசாதுரியமும் கொண்டவர்களே மறைமுகத் தேர்தலில் பங்குபற்றுவதால் தேர்தல் முடிவுகள் எப்போதும் உயர் ஜனநாயகப் பண்பு கொண்டதாகவே காணப்படும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதியை தேர்தல் கல்லூரி மூலமாக தெரிவு செய்கின்ற போது தேர்தல் கல்லூரி அங்கத்தவர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டே ஜனாதிபதியை தெரிவு செய்கின்றார்கள்.

ஆயினும் மக்கள் தமது இறைமையினை நேரடியாக அனுபவிப்பதற்கு இத்தேர்தல் தடையாக உள்ளது எனக் கூறப்படுகின்றது. மேலும் நேரடித் தேர்தல் முறைமையானது மறைமுகத் தேர்தல் முறைமையினை விட அதிக ஜனநாயகப் பண்பினை கொண்டதாகும். மறைமுகத் தேர்தல் மூலமாக தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதி நேரடியாக மக்களுக்கு பொறுப்புக்கூறத் தேவையில்லை என்பதால் மக்களுடன் அவர் நேரடித் தொடர்பினை கொண்டிருப்பதில்லை எனவும் கூறப்படுகின்றது.

Share

Who's Online

We have 108 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.