Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல் by Thanabalasingham Krishnamohan

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977 by...

Civil Society

Civil Society

Civil Society by Thanabalasingham Krishnamohan

  • இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம்

    Tuesday, 15 October 2013 23:36
  • The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in after 1997

    Tuesday, 15 October 2013 23:20
  • நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு வகித்தல்

    Tuesday, 15 October 2013 23:39
  • இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபை பிரதிநிதித்துவம் சில வரலாற்றுப் பதிவுகள்: 1931-1977

    Sunday, 28 December 2014 17:17
  • Civil Society

    Civil Society

    Tuesday, 15 October 2013 23:18
Plantation Trade Union Movement in Sri Lanka
Plantation Trade Union Movement in Sri Lanka
இலங்கைப் பெருந்தோட்ட தொழிற்சங்க இயக்கங்கள்;>குமரன் புத்தக இல்லம் கொழும்பு>2008> ISBN - NO: 978-955-659-124-9 கண்காணிமார்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இலங்கை வந்து மத்தியமலை பிரதேசங்களில் வேலைக்காக குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் வேதனம்,வேலைநாட்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கினர். இதனை எதிர்த்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காக போராட்டங்களை நடாத்தினர். இவ்வகையில் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் சமூகப் பொருளாதார பண்புகளையும், 1970 ஆம் 1977 ஆம் ஆண்டுகளில் பதவியேற்ற அரசாங்கங்கள் பின்பற்றிய கொள்கைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்,தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன்களுக்காக நடாத்திய போராட்டங்கள் போன்றவற்றையும் தொழிலாளர்களுக்கும், தோட்டமுகாமைத்துவத்திற்கு இடையிலும், தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் ,பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக இந் நூல் ஆய்வு செய்கின்றது.
More...
Political Science: Study of State and Identification of State
Political Science: Study of State and Identification of State
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும் ;> சேமமடு பதிப்பகம், கொழும்பு>2009. ISBN - NO: 978-955-1857-60-8 அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள், அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை, அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அரசியல் விஞ்ஞானத்தினை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசியல் விஞ்ஞானமும், ஏனைய சமூகவிஞ்ஞானப்பாடங்களும், அரசு,தோற்றமும்,வளர்ச்சியும், அரசினை இனம் காணுவதற்கான அடிப்படைகள், அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்,கோட்பாடுகள் போன்றன நடைமுறை விவகாரங்களுடனும்,அனுபவங்களுடனும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
More...
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
Triangular Power Straggle in Indian Ocean and Ethnic Conflict in Sri Lanka
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் குமரன் புத்தக இல்லம், 2012 ISBN 978-955-659-343-3 இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் அதிக முதலீடுகளை சீனா செய்து வருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையினைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றன.பூகோள வல்லரசுகளும்,பிராந்திய வல்லரசுகளும் நடத்தும் அதிகாரப் போராட்டத்தினால் ஏற்படக்கூடிய பதிப்புக்களிலிருந்து இலங்கை தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது தடுமாறுகின்றது.
More...
Political Science: Political Activity and Political Processes
Political Science: Political Activity and Political Processes
அரசியல் விஞ்ஞானம்: அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்;> சேமமடு பதிப்பகம், கொழும்பு >2010> ISBN - NO: 978-955-1857-61-5 பொதுக் கொள்கை, பொதுநிர்வாகவியலின் இயல்பு> பொது முகாமைத்துவம்> மோதலை விளங் க்கிக்கொள்ளல், மோதலும் வன்முறையும்,மோதலும் அகிம்சையும்,மோதலைத் தடுத்தல், மோதலைத் தீர்த்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், சமாதானக் கற்கை, சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட்டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமநிலை, சர்வதேசச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாடும்,ஆயுதக்களைவும் போன்ற சர்வதேச அரசியலில் இடம்பெறும் சில முக்கியமான கோட்பாடுகள் பல இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
More...
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌
சர்வதேச ஆய்வுப்பரப்பில்‌ அரசறிவியல்‌, நிர்வாகவியல்‌ போன்ற துறைகள்‌ மிகுந்த அவதானத்தையும்‌, முக்கியத்துவத்தையும்‌ பெறுகின்றன. இவ்வகையில்‌ "பொது நிர்வாகத்தில்‌ மனிதவள முகாமைத்துவம்‌: முன்னணி நாடுகளின்‌ சிவில்‌ சேவை மாதிரிகள்‌" என்ற புதுக்கிய இந்நூல்‌ பல்கலைக்கழக மாணவர்களுக்கும்‌, புலமைத்துவம்‌ சார்‌ சமூகத்தினர்க்கும்‌ பயனுடையதாகும்‌.

சிவில்‌ சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன்‌ சர்வதேச நாடுகளின் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ்‌, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலான நாடுகளின்‌ சிவில்‌ சேவைக்‌ கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல்‌ நோக்கில்‌ இந்நூல்‌ எழுதப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்‌.
More...
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம்
மோதல் தீர்வுக் கற்கை நெறி தொடர்பான ஆய்வுகள் மனித மோதலின் தன்மை மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல், ஆரோக்கியமான உறவுகளை வளர்த்தல், வன்முறையைத் தடுக்கும் வழிகளிகள் மற்றும் மோதலைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று வழிகளைத் தேடுதல் என்பவைகளில் கவனம் செலுத்துகின்றது. மோதல், தகராறு, வன்முறை, யுத்தம் அதிகாரம், கலாசாரம். நீதி, சமாதானம், தகவல் தொடர்பு, முகாமைத்துவம், மோதலைத் தீர்த்தல், மோதல் நிலைமாற்றம் போன்ற தலைப்புகளுடன் தொடர்புபடும் வகையில் மோதல் தீர்வுக் கற்கை நெறி பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. தனிப்பட்ட, தேசிய, சர்வதேசிய மோதல் சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மோதலை ஆக்கபூர்வமாகப் புரிந்துகொள்ளவும், தொடர்பு கொள்ளவும் மோதல் தீர்வுக் கற்கை நெறி மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இவ்வகையில் தமிழ்மொழி மூலமான பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அரசறிவியலை உயர்தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும், பொதுவான விடயங்களைத் தேடி வாசிக்கும் வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் மோதல் தீர்வுக் கற்கைகள்: ஒர் அறிமுகம் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல் வெளிவருகின்றது.
More...
Comparative Politics
Comparative Politics
ஒப்பியல் பொதுநிர்வகம்: தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் சிவில் நிர்வாகமுறைமை > குமரன் புத்தக இல்லம் கொழும்பு >2007, ISBN - NO: 978-955-659-091-9

பிரித்தானிய ,பிரான்ஸ் ,அமெரிக்க,இந்தியா ,இலங்கை போன்ற ஐந்து நாடுகளின் சிவில் நிர்வாக சேவைகளின் வரலாற்று அபிவிருத்தியையும், கோட்பாட்டு நடைமுறை அம்சங்களையும் விமர்சனரீதியாக இந் நூல் அணுகுகின்றது.சிக்கலான விடயங்களையும்.பதங்களையும் எளிமையாகவும்,தெளிவாகவும்,ஆழமாகவும் இந் நூல் விளக்குகின்றது.

More...

Around the World

  • The NYC mayoral race frontrunner's emotional speech about Islamophobia comes a day before early voting begins.

    Read more...
  • Tensions are mounting over President Ouattara's decision to run for a fourth term and a ban on opposition candidates.

    Read more...
  • UK prosecutors said defendants planned a 'sustained campaign of terrorism and sabotage' backed by Russia's Wagner Group.

    Read more...
  • Southeast Asia and its 'China Plus One' supply chain are feeling the fallout from the US trade war.

    Read more...
  • Here are the key events from day 1,339 of Russia’s war on Ukraine.

    Read more...
  • Former Queen Sirikit, mother of Thailand's current King Vajiralongkorn, passed away on Friday night, the palace said.

    Read more...
  • The probe comes as the US government seeks additional leverage against Beijing amid escalating trade tensions.

    Read more...
  • Study finds that rates soar to 90 percent in some regions as humanitarian crises compound childhood exploitation.

    Read more...
  • Move to close Vilnius, Kaunas airports and border comes after helium balloons drifted into the country's territory.

    Read more...
  • South Africa, Nigeria, Mozambique, Burkina Faso removed from Financial Action Task Force's financial crimes list.

    Read more...
பிரதிநிதித்துவம் - 4.1 out of 5 based on 19 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 4.08 (19 Votes)

பிரதிநிதித்துவம் என்பது மனோபாவம், நோக்கு, முன்னுரிமை, விருப்பம் என்பவற்றின் வழி முழுப் பிரஜைகளினாலும் தீர்மானிக்கப்படுவதாகும். அல்லது ஒரு பகுதி பிரஜைகளால் தீர்மானிக்கப்படுவதாகும். பிரஜைகள் அரசாங்கம் செயற்படுவதற்கான அனுமதியை தங்களில் இருந்து தெரிவாகும் அங்கத்தவர்களுக்கூடாக வெளிப்படுத்துகின்றனர். சுருக்கமான ஒரு விளக்கத்தினை கொடுப்பதாயின் குடியரசு மரபின் வழி அரசாங்கம் உருவாவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி பிரதிநிதித்துவம் எனலாம். ஜேர்மனிய சமூக கோட்பாட்டாளர் ரொபர்ட் வொன் மோல் (Robert Von Mohl ) என்பவர் பிரதிநிதித்துவம் என்பது “முழுப்பிரஜைகளினதும் செல்வாக்கின் மூலமான தெரிவு அல்லது பிரஜைகளில் ஒரு பகுதியினர் தங்களிலிருந்து அங்கத்தவர்களை தெரிவு செய்து கொள்வதன் மூலம் அரசாங்க செயற்பாட்டிற்கான அனுமதியை வெளிப்படுத்துதல்” என்கின்றார்.

பிரதிநிதித்துவத்தின் வகைப்பாடுகள்

பிரதிநிதித்துவம் என்பது மிகவும் காலத்தால் முற்பட்டதாகும். புராதன மத்திய காலங்களில் நிலவிய சமுதாயங்களில் இயங்கிய அரசியல் நிறுவனங்களுக்கு மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அனுப்பியிருந்தார்கள்.

நவீன காலத்தில் இப்பிரதிநிதித்துவ முறைமையானது மெருகூட்டப்பட்டு புதிய வடிவத்தினை பெற்றுக் கொண்டது. அதாவது நவீன காலத்தின் ஜனநாயக வளர்ச்சிக்கு ஏற்ப அதன் இயல்பான முக்கியத்துவம் வளர்ச்சியடைந்து வருகின்றது. அத்துடன் சமூக கோட்பாடுகளும் பிரதிநிதித்துவத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக விமர்சன ஆய்வுகளை மேற்கொண்டே வருகின்றன. எல்லா விமர்சன ஆய்வுகளும் நாட்டின் பிரதேசத்தினை அல்லது புவிசார் நிலையினை மையமாகக் கொண்டே பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. அத்துடன் இவ் ஆய்வுகள் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்களின் நலன் தொடர்பாக பிரதிநிதித்துவ முறைமைகளில் சில மாற்றங்களை உருவாக்க வேண்டும் எனவும் கூறுகின்றன. இவ்வகையில் பிரதிநிதித்துவம் தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் அவற்றுள் பின்வருவன முதன்மையானவைகளாகும்.

பிரதேசவாரி பிரதிநிதித்துவம்

குறிப்பிட்ட நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பிரதேச ரீதியான பிரதிநிதிகளாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை பிரதேசவாரி பிரதிநிதித்துவம் குறித்து நிற்கின்றது. ஒவ்வொரு பிரதேசமும் வரையறுக்கப்பட்டு வாக்காளர் தொகுதியாக வகுக்கப்படும். இவ்வாறு தொகுதி வகுக்கப்படும் போது சனத்தொகையின் அளவும் கருத்தில் எடுக்கப்படும். அதாவது தொகுதியின் பிரதேச அளவு கருத்தில் எடுக்கப்படும். அதே நேரத்தில் வாக்களிக்கத் தகுதி உடையவர்களின் எண்ணிக்கையும் கருத்தில் எடுக்கப்படும். பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் வாக்காளர் தொகுதி ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் குறிப்பிட்ட பிரதேசத்தின் பிரதிநிதியாகவே கருதப்படுவார். ஆனால் இங்கு வாக்களிக்கத் தகுதியுடையோர்களின் எண்ணிக்கையும் பிரதேசத்தின் அளவும் கருத்தில் எடுக்கப்படல் வேண்டும்.

தொழில் வகைப் பிரதிநிதித்துவம்

பிரஜைகளால் சமுதாயத்தில் காணப்படும் தொழில் சார் பிரிவினருக்காக உருவாக்கப்படும் பிரதிநிதித்துவ முறைமையே தொழில் வகைப் பிரதிநிதித்துவ முறைமையாகும். இலகுவாக வரையறுப்பதாயின் பிரதேச ரீதியான தொகுதிகள் தொழில் வகைத் தன்மைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும். எவ்வகை தொழில் சார்ந்தோர் ஒரு பிரதேசத்தில் கூடுதலாக வாழ்கின்றார்களோ அவர்களுடைய தொகுதியாக இது கருதப்படும். அதாவது இவர்கள் ஒரு நாட்டின் குறிப்பிட்ட தொகுதியின் தொழில் வகைப் பிரிவினராக கருதப்படுவார்கள். இவ்வகையில் சட்டசபை பிரதிநிதித்துவமானது வியாபார வர்க்கம் வியாபாரியையும் தொழிலாளர் வர்க்கம் தொழிலாளியையும் விவசாய வர்க்கம் விவசாயியையும் ஆசிரியர் வர்க்கம் ஆசிரியரையும் கொண்டு காணப்படும். தொழில் வகைப் பிரதிநிதித்துவமானது மறைந்த சோவியத் யூனியனிலும் முசோலினியின் இத்தாலியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இப்பிரநிதித்துவ முறைமையினை Laski, Dunning, G.D.H.Cole போன்றவர்கள் கடுமையாக விமர்சிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையோர் பிரதிநிதித்துவம்

ஜனநாயகத்தின் இலக்கு அரசாங்கத்தில் பங்குபற்றும் நாட்டு மக்கள் அனைவரதும் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதாகும். ஒருமித்த தன்மை, இயல்பு கொண்ட மக்கள் தொகையுள்ள அரசுகளில் தான் இவ் இலக்கு வெற்றியடையும். அதாவது ஒரே வகையான இனக்குழு மக்கள், ஒரே மொழி பேசுகின்ற மக்கள், ஒரே சமயம் பொருளாதார அந்தஸ்து போன்றவை காணப்படுகின்ற அரசுகளில் தான் வெற்றியடைய முடியும். ஆனால் இவ்வாறான சமூக அமைப்பு காணப்படுவது மிக மிக அருமையாகவே உள்ளது.

உலகில் உள்ள அனேக அரசுகள் வௌ;வேறான சிறுபான்மையின மக்களை கொண்டதாக காணப்படுகின்றது. இது அரசுகளில் பிரதிநிதித்துவப் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. எனவே சிறுபான்மையின மக்களுக்கு பிரதிநிதித்துவத்தினை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே இப்பிரதிநிதித்துவ முறையாகும். அதாவது சமயம், மொழி, இனம், கலாசாரம் போன்ற அடிப்படையில் மக்களிற்கு பிரதிநிதித்துவத்தினை வழங்குவதாகும். சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.அவைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

கட்டுப்படுத்தப்பட்ட வாக்கு முறைமை

இம்முறையின் கீழ் குறைந்தது மூன்று அங்கத்தவர்களை கொண்ட பல அங்கத்தவர்கள் தொகுதிகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு வாக்காளருக்கும் மூன்றிற்கு குறையாத வாக்குகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாக்கினையும் தாம் விரும்பும் மூன்று பேருக்கு வாக்காளன் வழங்க முடியும். இதனால் சிறுபான்மையினர் தமது பிரதிநிதியை பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

தனிவாக்கு முறைமை

தனிவாக்கு முறைமையானது பல அங்கத்தவர் தேர்தல் தொகுதியில் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு வாக்காளனுக்கு ஒரு வாக்கு மட்டுமே வழங்கப்படும். வேட்பாளர்கள் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்படுவார்கள். சிறுபான்மையினர் இம்முறைமையினால் தமது பிரதிநிதிக்கு வாக்களிக்க முடியும். இங்கு பெரும்பான்மை என்பது தெரிவு செய்யப்படும் வேட்பாளருக்கு வேட்பாளர் வேறுபட்டு காணப்படும்.

குவிக்கப்பட்ட வாக்கு முறைமை

குவிக்கப்பட்ட வாக்கு முறையின் கீழ் தேர்தல் தொகுதி பல அங்கத்தவர் தொகுதியாக காணப்படும் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குகள் வழங்கப்படும். வாக்காளர் தமது முழு வாக்குகளையும் ஒருவருக்கு அல்லது வெவ் வேறானவர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் சிறுபான்மையினர் தமது வாக்குகள் அனைத்தையும் தமது பிரதிநிதிக்கு வழங்கி அவரை வெற்றியடையச் செய்யலாம். இதனை திரண்ட வாக்கு முறைமை (Plumping Vote System) எனவும் அழைக்கின்றார்கள்.

ஆசன ஒதுக்கீடு நியமன முறைமை

அரச தலைவரால் சிறுபான்மை இனத்தவர்களுக்காக பிரதிநிதி நியமனம் செய்யப்படுகின்றார். பொதுவாக இவ்வாறான நியமனங்கள் செய்யப்படுகின்ற போது ஒவ்வொரு சிறுபான்மை இனங்களினதும் மக்கள் தொகை கணக்கில் எடுக்கப்படும். அதே நேரத்தில் சாதாரணமாக இவர்கள் சில தேர்தல் தொகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார்களா? என்பதும் கவனத்தில் கொள்ளப்படும். உதாரணமாக இந்தியாவில் பழங்குடியினர் ஒதுக்கப்பட்ட வகுப்பினர் போன்றவர்களுக்கு நியமன முறைமை பயன்படுத்தப்படுகின்றது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்

1793 ஆம் ஆண்டு பிரான்சின் தேசிய மகாநாட்டில் முதன் முதலாக விகிதாசார பிரதிநிதித்துவ முறைபற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் 1820ஆம் ஆண்டு விகிதாசார பிரதிநிதித்துவ முறையானது பிரித்தானிய கல்விமானாகிய தோமஸ் ரைட் வில் (Thomas Wright Will ) என்பவரால் அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1842 ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்திலும் 1854ஆம் ஆண்டு கால் அன்ரே (Carl Andrae ) என்பவரால் டென்மார்க்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பிற்பட்ட காலங்களில் பிரித்தானிய சட்டத்தரணியாகிய தோமஸ் ஹர் (Thomas Hare ) என்பவர் எழுதிய பிரதிநிதித்துவ பொறிமுறை (The machinery of Representation ) என்ற நூலில் இம்முறை பற்றி எழுதியிருந்தார். இந்நூல் 1859 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டு எழுதப்பட்ட பிரதிநிதித்துவ தேர்தல் ஒப்பந்தம் (Treatise on the Elections of Representation ) என்ற நூலில் இம்முறைமை பற்றி தோமஸ் ஹர் எழுதியிருந்தார். தோமஸ் ஹர்றின் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை பின்னர் ஜே.எஸ் மில் (J . S . Mill ) என்பவரால் 1860 ஆம் ஆண்டு முதன்மைப்படுத்தப்பட்டது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இரண்டு வகையான இயல்புகள் காணப்படுகின்றன. ஒன்று ஒற்றை மாற்று வாக்கு முறை அல்லது ஹர் முறை மற்றையது பட்டியல் முறை ஆகும்.

ஒற்றை மாற்று வாக்கு முறை அல்லது ஹர்முறை

ஒற்றை மாற்று வாக்கு முறை தோமஸ் ஹர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இதனால் இவரின் பெயரால் இது அழைக்கப்படுகின்றது. ஹர் முறையில் நான்கு முக்கிய இயல்புகள் காணப்படுகின்றன.

  1. பல அங்கத்தவர்களை கொண்ட தேர்தல் மாவட்டம்
  2. ஆகக் குறைந்த தேர்தல் வீதப் பங்கு (quota)
  3. எல்லா வேட்பாளருக்குமான தனிப்பட்டியல்
  4. ஒற்றை மாற்று வாக்குகள்

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் சனத்தொகையினை அடிப்படையாகக் கொண்டு சட்ட சபைக்கான ஆசனங்கள் வேறுபட்ட அளவுகளில் ஒதுக்கப்படும். இதன் பின்னர், மொத்த வாக்குகள் கணக்கிடப்பட்டு ஆகக்குறைந்த தேர்தல் வீதம் வாக்கு பங்கு கணக்கிடப்படும். பொதுவாக தேர்தல் வீதப் பங்கானது மொத்தப் பெறுமதியான வாக்குகளை தெரிவு செய்யப்பட வேண்டிய மொத்த ஆசனங்களுடன் ஒன்றைக் கூட்ட வரும் தொகையினால் பிரிக்கப்பட வேண்டும். பின்னர் பிரிக்க வரும் தொகையுடன் மீண்டும் ஒன்றைக் கூட்ட வேண்டும். இதனையே தேர்தல் வீதப் பங்கு என அழைக்கின்றார்கள். இதன் வாய்ப்பாடு பின்வருமாறு அமைந்திருக்கும்.

தேர்தல் வீதப்பங்கு

வாக்காளர்கள் ஒரு தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக எத்தனை வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டுமோ அத்தனை வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள். வாக்காளர்கள் வாக்களிக்கின்ற போது தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமையின்படி 1, 2, 3 என வழங்கும்படி கேட்கப்படுவார்கள்.

வாக்குகள் எண்ணப்படுகின்ற போது வேட்பாளர்களின் முதல் விருப்ப வாக்குகள் முதலில் எண்ணப்படும். வேண்டப்படும் தேர்தல் வீத பங்கு வாக்குகளை பெற்றவுடன் அவர் அங்கத்தவராக அறிவிக்கப்படுவார். முதல் சுற்று வாக்கில் வேண்டப்படும் தேர்தல் வீதப் பங்கு கிடைக்காவிட்டால் இரண்டாம் விருப்ப வாக்குகள் எண்ணப்படும். மொத்த அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்படும் வரை இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படும்.

பட்டியல் முறை

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் காணப்படும் அடுத்த முறைமை பட்டியல் முறைமையாகும். பட்டியல் நாட்டிற்கு நாடு வேறுபட்ட வழிமுறைகளில் பின்பற்றப்படுகின்றன. பட்டியல் முறைமையில் இரண்டு முக்கிய இயல்புகள் காணப்படுகின்றன.

  1. பல அங்கத்தவர்கள் தேர்தல் மாவட்டம்
  2. தேர்தலில் பங்குபற்றும் ஒவ்வொரு கட்சியும் தனியான அங்கத்தவர் பட்டியலை கொண்டிருத்தல்.

வேட்பாளர்கள் தமது கட்சி சின்னத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டிருப்பார்கள். ஒவ்வொரு கட்சியும் தெரிவு செய்யப்பட வேண்டிய அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக தமது வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்துக் கொள்ளுகின்றன. வாக்காளர் குறிப்பிட்ட ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களிக்கும்படி வேண்டப்படுவதுடன் தாம் விரும்பும் வேட்பாளர்;களை தமது சுய விருப்பிற்கு ஏற்ப பட்டியல்படுத்தும்படியும் கேட்கப்படுவார்.

பட்டியல் முறைமையில் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு சமமாக வாக்காளனுக்கு வாக்குகள் வழங்கப்படும். ஆனால் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கினை மட்டுமே வழங்க முடியும். பதிலாக எல்லா வாக்குகளையும் ஒருவருக்கு வழங்க முடியாது. பட்டியல் முறைமையிலும் ஹர் முறை போன்று தேர்தல் வீதப் பங்கின்அடிப்படையிலேயே வேட்பாளர் தெரிவு செய்யப்படுகின்றார். அதாவது ஒவ்வொரு கட்சியும்பெற்றுக் கொண்ட வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இரண்டாவது வாக்கு முறைமை

தேர்தலில் இரண்டிற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் போட்டியிடுகின்ற போது தெரிவு செய்யப்படுகின்ற அங்கத்தவர்கள் அறுதிப் பெரும்பான்;மை வாக்குகளை பெற்றுவிடுவதில்லை. பதிலாக ஆகக் குறைந்த வாக்குகளையே பெறுகின்றார்கள் எனச் சிலர் வாதிடுகின்றார்கள்.

இக்குறைபாட்டினை நீக்குவதற்காக ஒரு வாக்காளனுக்கு இரண்டு வாக்குகள் வழங்கப்படும். வாக்காளன் தனது முதல் விருப்பையும் இரண்டாம் விருப்பையும் தெரிவிக்கும்படி வேண்டப்படுவான். இதன் மூலம் அறுதிப் பெரும்பான்மை பெற்ற பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும் எனக் கூறப்படுகின்றது. இதனையே இரண்டாவது வாக்கு முறைமை எனக் கூறப்படுகின்றது.

உதாரணமாக 30,000 வாக்காளர் கொண்ட தேர்தல் மாவட்டத்தில் நான்கு பேர் போட்டியிடுகின்றார்கள் என எடுத்துக் கொண்டால்,

A

12,000

B

7,000

C

6,000

D

5,000

மொத்தம்

30,000

என்ற அடிப்படையில் வாக்குகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இங்கு A அறுதிப் பெரும்பான்மையினை பெற்றுக் கொண்டதாக கூற முடியாது. ஏனெனில் A விட B + C + D பெற்றுக் கொண்ட வாக்குகள் 18,000 ஆகும் . இன்னோர் வகையில் கூறின் A முதற் சுற்றில் 12,000 வாக்காளர்கள் ஆதரித்திருந்த அதே நேரத்தில் 18,000 வாக்காளர்கள் A யினை எதிர்த்து வாக்களித்துள்ளார்கள். எனவே A பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார் எனக் கூறுவது தவறானதாகும். எனவே இரண்டாம் விருப்ப தெரிவு வாக்குகள் A, B, C ஆகியோர்களுக்கு எண்ணப்பட்டு அறுதிப் பெரும்பான்மையினை யார் பெறுகின்றார்களோ அவரே பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படல் வேண்டும். இங்கு ஆகக் குறைந்த வாக்கினைப் பெற்ற D பட்டியலில் இருந்து நீக்கப்படுவார் என்பது கருத்தில் எடுக்கப்படல் வேண்டும்.

மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நடாத்தப்படும் தேர்தலில் பங்கு பற்றுவதற்கு உரித்துடையவர்கள். அதாவது தமது விருப்பு, முன்னுரிமை என்பவற்றின் அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்ள உரிமையுடைவர்கள். தேர்தலானது குறிப்பிட்ட நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப மறைமுகமாகவோ நேரடியாகவோ நடைபெற்றாலும் உண்மையில் ஜனநாயகத்தின் பாரம்பரியத்தின் வழி பிரதிநித்துவமுறைமையினை வலுப்படுத்துகின்ற ஒன்றாகவே உள்ளது.

ஆயினும் பிரதிநிதித்துவ முறைமைக்காக உருவாக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் அனைத்திலும் குறை நிறைகள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட நாட்டின் சூழ்நிலைக்கு எவ்வகை பிரதிநிதித்துவ முறை பொருத்தமானதாகக் காணப்படுகின்றதோ அதுவே நடைமுறையில் பின்பற்றப்படுகின்றது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை ஒப்பீட்டு ரீதியில் ஏனைய பிரதிநிதித்துவ முறைகளை விட சிக்கலான நடைமுறை விதிகளை கொண்டதாகும். இதனால் இம்முறையினை கண்டிக்கின்ற ஆய்வாளர்களும் காணப்படுகின்றார்கள். எவ்வாறாயினும் பிரதிநிதித்துவம் என்பது பிரஜைகளின் விருப்பு, மனோபாவம், முன்னுரிமை என்பவற்றினால் தீர்மானிக்கப்படுகின்றதொன்றேயாகும்.

Share

Who's Online

We have 183 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .

    

 
 
Invalid RSS link or you're not allowed to read this Picasa gallery or album.